» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சி.வி. சண்முகத்தின் ஆதரவாளர்கள் 11 பேரின் கட்சிப் பொறுப்புகள் பறிப்பு: இபிஎஸ் அதிரடி!

வியாழன் 16, ஜூலை 2026 3:16:27 PM (IST)

edappadipalanisamyeps.jpg

விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க.வில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து, சி.வி. சண்முகத்தின் ஆதரவாளர்கள் 11 பேரை கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கிப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பின் அ.தி.மு.க.வில் ஏற்பட்ட உட்கட்சி விவாதங்களைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டப் புதிய செயலாளராகப் பசுபதி நியமிக்கப்பட்டார். மாவட்டச் செயலாளர் பசுபதி தரப்பினருக்கும், சி.வி. சண்முகம் தரப்பினருக்கும் இடையே கட்சிப் பணிகளில் முரண்பாடுகள் நீடித்து வந்தன.

கடந்த ஜூலை 9 ஆம் தேதி விழுப்புரத்தில் நடைபெற்ற அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தின்போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் வாகனங்கள் மீது கல்வீச்சு மற்றும் சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்றன.

கட்சியின் கட்டுப்பாட்டை மீறிச் செயல்பட்ட இந்தச் சம்பவம் தொடர்பாகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சி.வி. சண்முகத்தின் ஆதரவாளர்கள் 11 பேர் அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory