» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆழ்துளைக் கிணறு தோண்டிய போது மின்சாரம் தாக்கி 4 தொழிலாளர்கள் பரிதாப பலி!

ஞாயிறு 12, ஜூலை 2026 11:40:55 AM (IST)

மாமல்லபுரம் அருகே ஆழ்துளைக் கிணறு தோண்டும் போது மின்கம்பியில் இரும்புக் குழாய் உரசியதால் மின்சாரம் தாக்கி 4 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள தனியார் விடுதியில் குடிநீர்ப் பிரச்சினைக்காக 40 அடி ஆழத்தில் ஆழ்துளைக் கிணறு தோண்டும் பணி நடைபெற்றது. இப் பணியில் நெய்குப்பியைச் சேர்ந்த பிரபு, வசந்தபுரியைச் சேர்ந்த பாலாஜி, மாமல்லபுரத்தைச் சேர்ந்த பாட்ஷாபாய், கடம்பாடியைச் சேர்ந்த ராஜேந்திரன், காரணையைச் சேர்ந்த பகவான் ஆகிய ஐந்து தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

40 அடி ஆழத்தில் ஆழ்துளை தோண்டும் பணி முடிந்தவுடன், இரும்புக் குழாயை ஐந்து பேரும் ஒன்றாக மேலே தூக்கியுள்ளனர். அப்போது இரும்புக் குழாய் எதிர்பாராதவிதமாக அங்கிருந்த உயர்அழுத்த மின்கம்பி மீது உரசியது.

மின்சாரம் தாக்கியதில் ஐந்து பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் பிரபு, பாலாஜி, பாட்ஷாபாய், ராஜேந்திரன் ஆகிய நால்வரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த பகவான் சிகிச்சைக்காகச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்த நால்வரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காகச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இப் பேரிடர் விபத்து குறித்துத் தகவல் அறிந்த செங்கல்பட்டு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சாய் சரண் தேஜஸ்வி, மாமல்லபுரம் துணை காவல் கண்காணிப்பாளர் அறிவழகன், திருப்போரூர் எம்.எல்.ஏ. விஜயராஜ், செங்கல்பட்டு ஆர்.டி.ஓ. பாலாஜி சம்பவ இடத்தைப் பார்வையிட்டுத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory