» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஸ்டார் 3.0 மென்பொருள் கலந்துரையாடல்: பத்திரம் எழுத்தர்களுக்குச் சார் பதிவாளர் ஆலோசனை!

சனி 11, ஜூலை 2026 8:12:23 PM (IST)

Kalidaireg.jpg

கல்லிடைக்குறிச்சி சார் பதிவாளர் அலுவலகத்தில் ஸ்டார் 3.0 மென்பொருள் குறித்த ஆலோசனை மற்றும் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. 

தமிழ்நாடு அரசு பதிவுத்துறையில் 3.0 மென்பொருள் வழியாக இணைய வழி பத்திரப்பதிவு நடைமுறையை அமல்படுத்தியுள்ளது. இப்புதிய இணைய வழி பத்திரப்பதிவு நடைமுறையை முறையாகப் பின்பற்றிப் பத்திரம் பதிவு செய்வது குறித்துக் கல்லிடைக்குறிச்சி சார் பதிவாளர் அலுவலகத்தில் ஆலோசனைக் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. 

இக் கூட்டத்தில், பத்திரம் எழுத்தாளர்கள் மற்றும் கணினி உதவியாளர்களுக்குச் சார் பதிவாளர் பி.சுதாகர் குமார் விரிவான ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கினார். இக் கலந்துரையாடல் கூட்டத்தில் பத்திரம் எழுத்தர்கள், வழக்குரைஞர்கள், கணினி உதவியாளர்கள், சார் பதிவாளர் அலுவலகப் பணியாளர்கள் கலந்துகொண்டு புதிய மென்பொருள் செயல்பாடுகள் குறித்துக் கேட்டறிந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory