» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பதவிப் பிரமாணத்திற்கு எதிரான குற்றம்: முதல்வர் விஜய்க்கு அப்பாவு கண்டனம்!

சனி 11, ஜூலை 2026 5:15:59 PM (IST)

சிபிஐ விசாரணையில் இருக்கும் 41 பேர் இறந்த கரூர் சம்பவம் குறித்துப் பொதுவெளியில் பேசுவது பதவிப் பிரமாணத்திற்கு எதிரான குற்றம் என்று சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகர் அப்பாவு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர் கண்காணிப்பில் சிபிஐ விசாரணையில் இருக்கும் 41 பேர் இறந்த கரூர் சம்பவம் குறித்துப் பொதுவெளியில் பேசுவது இந்திய அரசியல் சட்டப்படி குற்றம் என்ற விபரம் தமிழக முதல்வருக்குத் தெரியாதா எனக் கேள்வி எழுப்பியுள்ளார். 41 பேர் கொலைக்குக் காரணம் காவல் துறைதான் என்ற அபாண்ட குற்றச்சாட்டை இருமுறை டெல்லி சிபிஐ விசாரணைக்குச் சென்றபோது தெரிவித்தீர்களா என்றும் வினவியுள்ளார்.

தமிழக முதல்வர் அரசு தலைமைச் செயலாளர், முதல்வரின் தனிச் செயலாளர்கள் வழிகாட்டுதலோடு ஆட்சி நடத்துகிறாரா அல்லது சினிமா தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் வழிகாட்டுதலோடு வசனம் பேசி வருகிறாரா என அப்பாவு விமர்சித்துள்ளார்.

சட்டப்பேரவையில் கட்சி நிதி என்று சொன்னதும் திமுகவினர் ஓடிவிட்டார்கள் என்று நக்கலடிக்கும் முதல்வர் விஜய், தேர்தலுக்கு முன் உங்கள் சட்டப்பேரவை வேட்பாளர்கள் ஒவ்வொருவரிடமும் 2 கோடி ரூபாய் முதல் 10 கோடி ரூபாய் வரை கட்சி நிதி பெற்றுக்கொண்டுதான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதாகத் தவெக கட்சியினர் புலம்புவது காதுகளுக்கு எட்டவில்லையா என்றும், இதுதான் தூய கட்சி ஆட்சியின் லட்சணமா என்றும் முன்னாள் சபாநாயகர் அப்பாவு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory