» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் அதிரடி சோதனை!
வெள்ளி 3, ஜூலை 2026 4:59:24 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் இன்று அதிரடிச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி பீட்டர் பால்துரை தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்திற்குள் திடீரென நுழைந்து இந்த சோதனையைத் தொடங்கினர். குறிப்பாக, மாநகராட்சியின் பொறியியல் பிரிவு அலுவலகத்திற்குள் சென்ற போலீசார், உடனடியாக அதன் முக்கிய நுழைவு வாயிலைப் பூட்டி அதிரடி நடவடிக்கையில் இறங்கினர்.
இந்த திடீர் சோதனையின் காரணமாக மாநகராட்சி அலுவலக வளாகம் முழுவதும் பரபரப்பு நிலவி வருகிறது. சோதனை நடக்கும் சமயத்தில் வெளிப்பணிகள் நிமித்தமாக மற்றும் மதிய உணவுக்காக வெளியே சென்றிருந்த மாநகராட்சி ஊழியர்கள் மீண்டும் உள்ளே செல்ல முடியாமல் தடுத்து நிறுத்தப்பட்டனர். மேலும் வரி செலுத்த மனு அளிப்பதற்காக வந்த பொதுமக்கள் வெளியேற்றப்பட்டனர்.
லஞ்சப் புகார் மற்றும் முறைகேடுகள் குறித்த ரகசியத் தகவலின் பேரில் இந்த அதிரடி ரெய்டு நடத்தப்பட்டு வருவதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து போலீசார் அங்கு தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மாநகராட்சி வரலாற்றிலேயே லஞ்ச ஒழிப்பு போலீசார் இங்கு சோதனை நடத்துவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாநகராட்சி சோதனையில் ரூ.7.49 லட்சம் ரொக்கம் பறிமுதல்: லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை!
வெள்ளி 3, ஜூலை 2026 7:27:38 PM (IST)

குதிரை பேர விவகாரத்திற்கு முதலமைச்சர் விஜய் சிபிஐ விசாரணை கேட்பாரா? அப்பாவு கேள்வி!
வெள்ளி 3, ஜூலை 2026 5:16:19 PM (IST)

ஆட்சியைக் கவிழ்க்கச் சதித் திட்டம்: செந்தில் பாலாஜியைக் கைது செய்ய போலீசார் தீவிரம்!
வெள்ளி 3, ஜூலை 2026 3:55:01 PM (IST)

கோயில்களில் முறைகேடு, லஞ்சம் புகார் அளிக்க அமைச்சர் இ-மெயில் முகவரி வெளியீடு!
வெள்ளி 3, ஜூலை 2026 12:45:54 PM (IST)

முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது: ஆதரவாளர்கள் முற்றுகை - மறியல் - பரபரப்பு!
வெள்ளி 3, ஜூலை 2026 12:16:44 PM (IST)

பொதுமக்களுக்குப் பாதுகாப்பே இல்லை: கனிமொழி எம்பி கடும் கண்டனம்!
வெள்ளி 3, ஜூலை 2026 12:12:51 PM (IST)


