» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மூதாட்டியைக் கழுத்தை அறுத்துக் கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!
செவ்வாய் 16, ஜூன் 2026 8:30:56 AM (IST)
எட்டயபுரம் அருகே முன்விரோதம் காரணமாக மூதாட்டியைக் கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள வடக்கு முத்துலாபுரம் நாடார் தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் அருண்ராஜ் (32), டிரைவராகப் பணியாற்றி வந்தார். கடந்த 30.04.2015 அன்று அருண்ராஜ், வீரமுத்து அம்மாள் (65) என்ற மூதாட்டியின் வீட்டின் அருகே தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடியுள்ளார். அப்போது கிரிக்கெட் பந்து வீரமுத்துவின் வீட்டிற்குள் விழுந்ததால், அதை எடுக்கச் சென்ற அருண்ராஜை மூதாட்டி சத்தம் போட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அருண்ராஜ், வீரமுத்துவைச் சாதிப் பெயரைச் சொல்லித் திட்டியுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக, மறுநாள் வீரமுத்து ஆடு மேய்த்துக் கொண்டிருந்த போது, அருண்ராஜ் மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டிச் சென்று அவரைப் பயமுறுத்தியுள்ளார். இதுகுறித்து ஊர்ப் பெரியவர்களிடம் வீரமுத்து புகார் அளித்ததால், அவர்கள் அருண்ராஜைக் கண்டித்துள்ளனர். இதனால் இவர்களுக்கு இடையே கடுமையான முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்பவத்தன்று வடக்கு முத்துலாபுரத்தில் உள்ள தோட்டம் அருகே வீரமுத்துவும், அவரது உறவினர் காளியம்மாளும் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது காட்டுப் பகுதியில் மறைந்திருந்த அருண்ராஜ், வீரமுத்துவை வழிமறித்துக் கத்தியால் கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்தார். மேலும், தடுத்த காளியம்மாளையும் சாதிப் பெயரைச் சொல்லித் திட்டி மிரட்டல் விடுத்துத் தப்பியோடினார்.
இதுகுறித்து எட்டயபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து அருண்ராஜைக் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி எஸ்சி, எஸ்டி வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை முழுமையாக விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி வஷித்குமார், குற்றம் சாட்டப்பட்ட அருண்ராஜுக்கு ஆயுள் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நேற்று அதிரடி தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் பூங்குமார் ஆஜராகி வாதாடினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை : சார் பதிவாளர்கள் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு!
செவ்வாய் 16, ஜூன் 2026 8:34:25 AM (IST)

த.வெ.க ஆட்சி குறித்து 3 மாதங்களில் வாக்காளர்கள் சிந்திக்கத் தொடங்குவார்கள்: பாஜக சாடல்!
செவ்வாய் 16, ஜூன் 2026 8:12:44 AM (IST)

ஓமனில் தூத்துக்குடி மாலுமி மரணம்: குடும்பத்தினரை நேரில் சந்தித்து கீதாஜீவன் ஆறுதல்..!
செவ்வாய் 16, ஜூன் 2026 8:03:09 AM (IST)

சாலையில் கிடந்த ரூ.60,000 பணத்தை போலீசில் ஒப்படைத்த மாணவனுக்குப் பாராட்டுகள் குவிகிறது!
திங்கள் 15, ஜூன் 2026 8:49:19 PM (IST)

தொடர்கதையாகும் பாலியல் தொல்லைகள்: த.வெ.க அரசுக்கு அனிதா ராதாகிருஷ்ணன் கண்டனம்!
திங்கள் 15, ஜூன் 2026 8:15:36 PM (IST)

பாளையங்கோட்டை மத்திய சிறையில் வேலைவாய்ப்பு : கண்காணிப்பாளர் செந்தாமரைக்கண்ணன் அறிவிப்பு
திங்கள் 15, ஜூன் 2026 5:43:43 PM (IST)


