» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து: மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
வெள்ளி 12, ஜூன் 2026 12:09:08 PM (IST)
அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதை உறுதி செய்யக் கோரிய பொதுநல வழக்கில், மத்திய மற்றும் மாநில அரசுகள் 8 வாரங்களுக்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளைத் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்குவதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி, சென்னையைச் சேர்ந்த அனன்யா ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்ததாவது: "தமிழகத்தில் அரசு நிகழ்ச்சிகள் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கப்பட்டு, தேசிய கீதத்துடன் நிறைவு செய்யப்படுவது பல ஆண்டுகளாக மரபாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், இந்த நடைமுறையை நீர்த்துப்போகச் செய்யும் வகையில், அண்மைக்காலமாகச் சில அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரமும், தேசிய கீதமும் பாடப்பட்ட பிறகே தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுகிறது."
"அரசு நிகழ்ச்சிகளை வந்தே மாதரம் பாடியே தொடங்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஜனவரி 28-ஆம் தேதி பிறப்பித்த சுற்றறிக்கையில், மாநிலப் பாடலைப் பாடி அரசு நிகழ்ச்சியைத் தொடங்க எந்தத் தடையும் விதிக்கவில்லை. தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது வெறும் சடங்கு அல்ல; அது தமிழர்களின் உணர்வு, கலாசாரம் மற்றும் அடையாளமாகத் திகழ்கிறது.
எனவே, வந்தே மாதரம் பாடலை முதலில் பாட வலியுறுத்தி மத்திய அரசு பிறப்பித்த சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும். எதிர்காலத்தில் அரசு நிகழ்ச்சிகளில் இத்தகைய கலாசார மோதல்களைத் தவிர்க்கும் வகையில், தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடுவதற்குத் தகுந்த நிர்வாக அறிவுறுத்தல்களைப் பிறப்பிக்க உத்தரவிட வேண்டும்," என மனுதாரர் கோரியிருந்தார்.
நீதிமன்றம் உத்தரவு
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய மற்றும் மாநில அரசுகள் 8 வாரங்களுக்குள் விரிவான பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையில் உடன்பாடில்லை: முதல்வர் விஜய் விளக்கம்!
செவ்வாய் 23, ஜூன் 2026 5:54:24 PM (IST)

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் செப். 15 முதல் தொடக்கம்: ஆண்டுக்கு ரூ.755.83 கோடி ஒதுக்கீடு!
செவ்வாய் 23, ஜூன் 2026 4:22:37 PM (IST)

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு தேதி அறிவிப்பு: ஜூன் 30 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!
செவ்வாய் 23, ஜூன் 2026 3:44:57 PM (IST)

கணவனைத் தேடும் மனைவியின் கதை தமிழ்நாட்டுக்கே தெரியும்: குட்டிக்கதைக்கு உதயநிதி பதிலடி!
செவ்வாய் 23, ஜூன் 2026 3:31:12 PM (IST)

முதல்வர் விஜய் பேரவை மரபோடு நடந்து கொள்ள வேண்டும்: நயினார் நாகேந்திரன் அறிவுரை!
செவ்வாய் 23, ஜூன் 2026 3:26:41 PM (IST)

சட்டப்பேரவையை சினிமா தியேட்டராக மாற்றிவிட்டனர் : உதயநிதி ஸ்டாலின் கடும் சாடல்!
செவ்வாய் 23, ஜூன் 2026 12:09:05 PM (IST)


