» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு தேதி அறிவிப்பு: ஜூன் 30 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!

செவ்வாய் 23, ஜூன் 2026 3:44:57 PM (IST)

தமிழகத்தில் 26 காலிப் பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு - I (குரூப் 1) முதல்நிலைத் தேர்வு வரும் செப்டம்பர் மாதம் 6-ஆம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) ஆண்டுத் திட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி, தொகுதி I பணிகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் வரும் 30.06.2026 முதல் 29.07.2026 பிற்பகல் வரை இணையவழியில் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.

தேர்வர்கள் தங்களது தேர்வுக் கட்டணத்தை இணையவழித் தளங்கள் மட்டுமின்றி, யுபிஐ (UPI) மூலமாகவும் எளிதாகச் செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 1 முதல்நிலைத் தேர்வானது வரும் 06.09.2026 அன்று நடைபெறும் எனத் தேர்வாணையம் தனது அறிவிக்கையில் தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory