» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சட்டப்பேரவையை சினிமா தியேட்டராக மாற்றிவிட்டனர் : உதயநிதி ஸ்டாலின் கடும் சாடல்!
செவ்வாய் 23, ஜூன் 2026 12:09:05 PM (IST)

சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் ஆற்றிய பதிலுரைக்கு எவ்வித முறையான பதிலும் இல்லை என்றும், அவர் சூட்டிங் ஸ்பாட்டில் வசனத்தை ஒப்பிப்பது போல் பேசிவிட்டுச் சென்றுள்ளார் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய்யின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததைத் தொடர்ந்து, பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சரின் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளித்தார்.
சட்டப்பேரவையின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், இறுதியில் தேசிய கீதமும் பாடப்படுவதுதான் மரபு என்றும், ஆனால் இங்கு மரபை மீறி இருமுறை தேசிய கீதம் பாடப்பட்டுள்ளது என்றும் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டார். தமிழ்த்தாய் வாழ்த்து ஏன் இருமுறை பாடப்படவில்லை என்ற தனது கேள்விக்கு அரசிடம் பதில் இல்லை என அவர் சாடினார்.
'நான் முதல்வன்' திட்டம் மூலம் 41 லட்சம் மாணவர்கள் பயன்பெற்ற நிலையில், அதனை முடக்கியது குறித்துக் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு முறையான பதில் அளிக்கப்படவில்லை என்றார். மேலும், மின்வெட்டு குறித்த கேள்விக்குச் சரியான பதிலளிக்காமல் திமுக மீது அரசு பழிபோட்டுள்ளதாகக் குற்றம் சாட்டினார். விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடிப் போராட்டத்தை திமுக தூண்டிவிடுவதாக முதலமைச்சர் கொச்சைப்படுத்தியுள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.
திமுக ஆட்சியில் டிஜிபி நியமிக்கப்படவில்லை எனக் கூறும் முதலமைச்சர், ஒரே நாளில் அனைத்தையும் சரிசெய்து விடுவேன் எனக் கூறித்தான் ஆட்சிக்கு வந்தார் என்பதை நினைவூட்டினார். தற்போதைய 40 நாள் ஆட்சியில் காவல்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், ஒவ்வொரு நாளும் வன்முறைகள் நிகழ்ந்து வருவதாகவும், ஒரே நாளில் 24 சம்பவங்கள் நடந்துள்ளதாகவும் அவர் கூறினார். குற்றச்சாட்டுகளில் ஆளுங்கட்சியினரே ஈடுபட்டு வருவதற்கான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாகக் குறிப்பிட்டார்.
யார் தயவிலும் ஆட்சி செய்யவில்லை எனக் கூறும் முதலமைச்சர், ஆட்சி அமைந்தவுடன் அதிமுகவின் ஒரு தரப்பினரை மட்டும் ஏன் சென்று பார்த்தார் எனக் கேள்வி எழுப்பினார். ஒவ்வொரு கட்சித் தலைவரைச் சந்திக்கப் போகும்போதும் முதலில் சோஃபா சென்றது, அதன்பின்னரே முதலமைச்சர் சென்றார் என விமர்சித்தார். அமைச்சர் அலுவலகத்திலேயே அதிமுக எம்எல்ஏக்கள் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைவதாகவும், சட்டப்பேரவையை இசை வெளியீட்டு நிகழ்ச்சி, டிரெய்லர் நிகழ்ச்சி போன்ற சினிமா தியேட்டராக மாற்றிவிட்டனர் என்றும் அவர் சாடினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சட்டம் - ஒழுங்குப் பிரச்னைகளை ஆரம்ப நிலையிலேயே தடுத்து நிறுத்தியிருக்கலாமே: முதல்வர் விஜய் கேள்வி!
செவ்வாய் 23, ஜூன் 2026 12:01:39 PM (IST)

திருச்செந்தூர் கோயில் கட்டண உயர்வு அறிவிப்பு : ஜூலை 7-க்குள் ஆட்சேபனைகளைத் தெரிவிக்கலாம்!
செவ்வாய் 23, ஜூன் 2026 10:50:50 AM (IST)

காவல் நிலையம் முன்பு தச்சுத் தொழிலாளி தீக்குளிப்பு: நெல்லை அருகே பரபரப்பு!
செவ்வாய் 23, ஜூன் 2026 8:42:13 AM (IST)

குழந்தைகளின் சமூக வலைத்தளப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த சட்டம்: முதலமைச்சருக்குக் கோவில்பட்டி எழுத்தாளர் மனு!
செவ்வாய் 23, ஜூன் 2026 8:25:47 AM (IST)

ஓடும் பேருந்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது!
செவ்வாய் 23, ஜூன் 2026 7:37:24 AM (IST)

கட்டாரிமங்கலம் அழகியகூத்தர் கோயிலில் ஆனி உத்திரத் திருவிழா: பன்னிரு திருமுறை விண்ணப்பம்!
செவ்வாய் 23, ஜூன் 2026 7:29:59 AM (IST)


