» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நெல்லையில் பள்ளிகள் திறப்பு: மாணவர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்ற ஆட்சியர்!

வியாழன் 4, ஜூன் 2026 12:26:10 PM (IST)



திருநெல்வேலி பாளையங்கோட்டை பெருமாள்புரம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் முதல் நாள் பள்ளிக்கு வருகை தந்த புதிய மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் மாலை அணிவித்து, இனிப்புகள் வழங்கி வரவேற்று, பள்ளி வகுப்பறைக்கு அழைத்து சென்றார். 

பின்னர் மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன், செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 1483 பள்ளிகளும் இன்று திறக்கப்பட்டு, மாணவர்கள் உற்சாகத்துடன் வரவேற்கப்பட்டனர்.

மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, காலை சிற்றுண்டித் திட்டம் இன்று செயல்படுத்தப்பட்டது. மாணவர்கள் அனைவரும் உணவு அருந்திவிட்டு வகுப்புகளுக்குச் சென்றது உறுதி செய்யப்பட்டுள்ளது.  தமிழ்நாடு அரசின் சார்பில் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், சீருடைகள், ஜாமென்ட்ரி பாக்ஸ், கிரயான்ஸ், கலர் பென்சில், அட்லஸ், காலணிகள் மற்றும் புத்தகப்பைகள் ஆகியவை இன்று பள்ளிகளிலேயே வழங்கும் பணிகள் பெருமாள்புரம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் வழங்கும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்த இறுதிப் புள்ளி விவரங்கள் இன்னும் ஒரு வாரத்தில் தெரியவரும் என்றும், தற்போதைய நிலவரப்படி சேர்க்கை விகிதம் அதிகரித்துள்ளதாகவும், பள்ளிக்கு வராத மாணவர்களைக் கண்டறியவும், இடைநிற்றலைத் தவிர்க்கவும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் தலைமையில் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

ஒரு பள்ளிக்கு ஒரு அதிகாரி" (One School One Officer) என்ற அடிப்படையில், துணை ஆட்சியர் முதல் வட்டாட்சியர் வரை அனைத்து பள்ளிகளுக்கும் ஒரு அதிகாரி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பள்ளிகள் கண்காணிக்கப்படவுள்ளது. கடந்த ஆண்டு வராத மாணவர்களின் வீடுகளுக்கே சென்று அவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வருவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் திருநெல்வேலி மாவட்டம் கல்வி மற்றும் இதர செயல்பாடுகளில் சிறப்பாக செயல்படுவதற்கு கூடுதல் கவனம் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சிவகுமார், வட்டாரக் கல்வி அலுவலர் மாரியம்மாள், தலைமையாசிரியர், ஆசிரியர்கள், அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory