» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு பாடை கட்டி நூதன போராட்டம் - கோவில்பட்டியில் பரபரப்பு!
வியாழன் 4, ஜூன் 2026 12:01:22 PM (IST)

கோவில்பட்டியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளைக் கண்டித்து சமூக ஆர்வலர்கள் பாடை கட்டி நூதனப் போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகரின் பிரதான சாலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் தரப்பில் பலமுறை முறையிட்டும், எவ்வித முயற்சியும் எடுக்காமல் காலம் கடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
அதிகாரிகளின் அலட்சியப் போக்கினைக் கண்டித்து கோவில்பட்டி சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இன்று காலை நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பாடை கட்டி, நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட சமூக ஆர்வலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

முதல்வர் விஜய் முன்னிலையில் ரூ.18,600 கோடியில் 3 திட்டங்களுக்கு ஒப்பந்தம்: 8,200 பேருக்கு வேலைவாய்ப்பு..!
வியாழன் 4, ஜூன் 2026 4:36:49 PM (IST)

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் 80 லட்சம் பெண்கள் நீக்கம்? தமிழக அரசு விளக்கம்!
வியாழன் 4, ஜூன் 2026 4:05:47 PM (IST)

மேயர் பிரியா - தவெக எம்எல்ஏ பல்லவி இடையே மோதல்! – அரசு விழாக்களில் பெரும் சர்ச்சை!
வியாழன் 4, ஜூன் 2026 3:53:39 PM (IST)

தமிழகத்தில் பெண்கள் பீதியில் உறைந்துள்ளனர்! – திருச்சி சம்பவத்திற்கு கனிமொழி எம்பி கண்டனம்!
வியாழன் 4, ஜூன் 2026 3:40:23 PM (IST)

குடும்பத் தலைவிகளுக்கு ரூ.2500 மாதாந்திர உதவித் தொகை : ஆளுநர் ஒப்புதல்
வியாழன் 4, ஜூன் 2026 3:30:55 PM (IST)

மின்துறை ஹார்டு டிஸ்குகள் திருடு போனது குறித்து விசாரணை : அமைச்சர் நிர்மல்குமார் தகவல்!
வியாழன் 4, ஜூன் 2026 12:51:40 PM (IST)


