» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
முதல்வர் விஜய்யை வரவேற்றது ஏன்? துரை வைகோ விளக்கம் - கூட்டணி குறித்து ஜூன் 27ல் முடிவு!
திங்கள் 1, ஜூன் 2026 5:29:35 PM (IST)
திருச்சிக்கு வருகை தந்த தமிழக முதலவர் விஜய்யை, மதிமுக முதன்மைச் செயலாளரும் திருச்சி எம்பியுமான துரை வைகோ நேரில் சந்தித்து வரவேற்றார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தனது வரவேற்பு மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்துப் பல்வேறு விளக்கங்களை அளித்தார்.
"முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாகத் திருச்சிக்கு வந்த விஜய் அவர்களை, இத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் (எம்பி) என்ற முறையில் முறைப்படி வரவேற்றேன். தற்போதைய சூழலில் தொகுதி கோரிக்கைகளை அவரிடம் அளிக்கவில்லை. அடுத்த முறை சந்திக்கும் போது கோரிக்கை மனுக்களை அளிப்பேன்.
மத்திய அரசின் திட்டங்களைச் செயல்படுத்த மாநில அரசின் உதவியும் கண்டிப்பாகத் தேவை. தமிழகத்தின் புதிய அரசு அதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கும் என நம்புகிறேன். புதிய அதிகாரிகள் பொறுப்பேற்றுள்ளதால், நிர்வாக மாற்றங்களைக் கொண்டு வர அவர்களுக்குக் குறைந்தது 6 மாத கால அவகாசமாவது தேவைப்படும்.
குற்றங்களை 100 சதவீதம் தடுத்து நிறுத்த முடியாது; அது வளர்ந்த நாடுகளிலும் நடப்பதுதான். ஆனால், குற்றம் நடந்தவுடன் குற்றவாளிகள் மீது வழக்குப் பதிவு செய்து, அவர்களைக் கைது செய்வதில் தற்போதைய அரசு தாமதம் காட்டுவதில்லை. தேர்தல் அறிக்கையில் கொடுத்துள்ள வாக்குறுதிகளைப் புதிய அரசு காலப்போக்கில் நிறைவேற்ற வேண்டும். தற்போதைய சட்டமன்றத்தில் தவெக தனிப்பெரும்பான்மை பெறாவிட்டாலும் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து, அரசியலமைப்பின்படி ஆட்சி அமைத்துள்ளது.
கூட்டணி குறித்து 27-ஆம் தேதி முடிவு:
மக்கள் தீர்ப்பை நாம் மதிக்க வேண்டும். எங்களது (மதிமுக) எம்எல்ஏக்கள் திமுக சின்னத்தில் போட்டியிட்டதால், இப்போது இவர்களுக்கு ஆதரவு அளிக்கக்கூடிய சூழல் இல்லை. இருப்பினும், காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் இந்த அரசுக்கு ஆதரவளித்துள்ளனர். "வரும் ஜூன் 27-ஆம் தேதி மதிமுக பொதுக்குழுக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. அதில், கூட்டணியில் தொடர்வது குறித்துக் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் விரிவாகப் பேசி இறுதி முடிவு எடுக்கப்படும்." என்று துரை வைகோ தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிங்கப்பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத தவெக ஆட்சி தூய சக்தியா? நயினார் நாகேந்திரன் விமர்சனம்!
திங்கள் 1, ஜூன் 2026 5:54:36 PM (IST)

ஊழல், லஞ்சமில்லாத ஆட்சியை வழங்குவேன்: திருச்சியில் முதல்வர் ஜோசப் விஜய் பேச்சு!
திங்கள் 1, ஜூன் 2026 5:40:35 PM (IST)

நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் நாளை கனமழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!
திங்கள் 1, ஜூன் 2026 5:18:18 PM (IST)

தாயுமானவர் திட்டத்தை தொடர தவெக அரசு முடிவு: நாளை முதல் வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்!
திங்கள் 1, ஜூன் 2026 4:58:34 PM (IST)

பாபநாசம் அணையில் இருந்து கார் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு: 10,265 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்!
திங்கள் 1, ஜூன் 2026 4:42:59 PM (IST)

நெல்லையில் தொடர் பைக் திருட்டு: 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது - 6 பைக்கள் பறிமுதல்!
திங்கள் 1, ஜூன் 2026 4:27:56 PM (IST)


