» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழகத்தில் புதிய அரசு அமைவதில் தாமதம் மே 8-ல் பிளஸ் 2 முடிவுகள் வெளியாகுமா?
புதன் 6, மே 2026 10:38:37 AM (IST)
தமிழகத்தில் புதிய ஆட்சி அமைய உள்ளதால் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படக்கூடும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகப் பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தின் கீழ், பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 2-ஆம் தேதி தொடங்கி மார்ச் 26-ஆம் தேதி வரை நடைபெற்றன. இந்தத் தேர்வை மாநிலம் முழுவதும் சுமார் 8,27,475 மாணவ, மாணவிகள் எழுதினர். இதற்கான விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஏப்ரல் 6-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 20-ஆம் தேதியுடன் நிறைவடைந்தன.
தற்போது மாணவர்களின் மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகள் மற்றும் மதிப்பெண் பகுப்பாய்வு உள்ளிட்ட இறுதிக்கட்டப் பணிகளைத் தேர்வுத்துறை வெற்றிகரமாக முடித்துள்ளது. முதலில் திட்டமிட்டபடி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 8-ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், தற்போதைய சூழலில் முடிவுகளை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: "தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு முன்பாக அரசின் கொள்கை ரீதியான ஒப்புதலைப் பெற வேண்டும். தற்போது தமிழகத்தில் தேர்தல் முடிவுகள் வெளியாகி, புதிய அரசு அமைவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. புதிய முதலமைச்சர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பொறுப்பேற்ற பின்னரே, அவர்களின் ஒப்புதலோடு முடிவுகள் வெளியாகும். எனவே, மே 8-ஆம் தேதி முடிவுகள் வெளியாவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன.
அடுத்த சில நாட்களில் புதிய அரசு பதவியேற்றதும், உரிய அனுமதி பெற்று பிளஸ் 2 முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, 2026-2027-ஆம் கல்வியாண்டிற்கான பொறியியல் படிப்புகளுக்கான (TNEA) இணையவழி விண்ணப்பப்பதிவு கடந்த மே 3-ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. தேர்வு முடிவுகள் தள்ளிப்போவதால், உயர்கல்வி சேர்க்கைக்கான அடுத்தகட்டப் பணிகள் பாதிக்கப்படுமோ என்ற கவலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தெற்கு ரயில்வேயின் புதிய தலைமை மக்கள் தொடர்பு அதிகாரியாக எஸ்.என். நரேன் நியமனம்!
புதன் 13, மே 2026 8:10:40 PM (IST)

கள்ளத்தொடர்பு விவகாரத்தில் இளம்பெண் கொலை: தம்பதி கைது - தூத்துக்குடியில் பயங்கரம்!
புதன் 13, மே 2026 5:21:10 PM (IST)

எடப்பாடி பழனிசாமி பதவி ஆசை: திமுகவுடன் கூட்டணி முயற்சி - சி.வி. சண்முகம் பரபரப்பு புகார்!
புதன் 13, மே 2026 4:57:47 PM (IST)

அமைச்சரவையில் நாடார் சமூக எம்.எல்.ஏ-க்களுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும்: சமக தீர்மானம்!
புதன் 13, மே 2026 4:53:34 PM (IST)

குதிரை பேரப் புகார்: தவெக தரம் தாழ்ந்த அரசியலில் ஈடுபடுவதாக மு.க. ஸ்டாலின் விமர்சனம்!
புதன் 13, மே 2026 4:21:55 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த ஆண்டு 50 பேர் குண்டர் சட்டத்தில் கைது!
புதன் 13, மே 2026 4:16:28 PM (IST)


