» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
வீடு வீடாக வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடா : திமுக பெண் நிர்வாகியிடம் ரூ.1.38 லட்சம் பறிமுதல்!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 4:53:18 PM (IST)
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடா செய்ததாக திமுக பெண் நிர்வாகி ஒருவரைத் தேர்தல் பறக்கும் படையினர் பிடித்து பணத்தைப் பறிமுதல் செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு காவல் சரகத்திற்கு உட்பட்ட ஆத்திகுளம் ராமலிங்கபுரம் கிராமத்தில், அரசியல் கட்சியினர் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களுக்குப் பணம் விநியோகிப்பதாகத் தேர்தல் பறக்கும் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, தேர்தல் பறக்கும் படையினர் ஆத்திகுளம் பகுதியில் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்குள்ள அம்பேத்கர் நகர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாடிக் கொண்டிருந்த பெண் ஒருவரைப் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் ஆத்திகுளம் பகுதியைச் சேர்ந்த மாரியம்மாள் (49) என்பதும், அவர் திமுக ஒன்றிய துணைச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வருவதும் தெரியவந்தது. அவரிடம் நடத்திய சோதனையில், வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக வைத்திருந்த ரூ.1,38,500 ரொக்கப் பணத்தைப் பறக்கும் படையினர் கைப்பற்றினர்.
முறையான ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட அந்தப் பணத்தைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், இது குறித்து கயத்தாறு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், மாரியம்மாளிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேர்தல் நேரத்தில் ஆளுங்கட்சி நிர்வாகி பணப் பட்டுவாடா புகாரில் பிடிபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசு கேபிள் கட்டணம் 50% குறைப்பு; 10 லட்சம் பேருக்கு பைக் மானியம்: இபிஎஸ் அறிவிப்பு
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 5:23:25 PM (IST)

பிரச்சாரம் ஓய்ந்தவுடன் கடைபிடிக்க வேண்டிய முக்கியக் கட்டுப்பாடுகள் மற்றும் தடைகள் அறிவிப்பு
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 4:34:50 PM (IST)

அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்; திமுக 20 இடங்களில் வென்றாலே ஆச்சரியம்: இபிஎஸ்
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 3:37:19 PM (IST)

தூத்துக்குடியில் 243 பதற்றமான வாக்குச்சாவடிகள்: பாதுகாப்பு பணியில் 3,642 போலீசார் தீவிரம்!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 3:19:44 PM (IST)

சட்டமன்ற பொதுத்தேர்தல் மினி மாரத்தான் போட்டி: ஆட்சியர் இரா.சுகுமார், தொடங்கி வைத்தார்
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 12:55:14 PM (IST)

நடிகர் பார்த்திபனுக்கு சாதி, மதமற்றவர் சான்றிதழ் : வட்டாட்சியருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 12:52:09 PM (IST)

