» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருநெல்வேலியில் தேர்தல் விழிப்புணர்வு சதுரங்கப் போட்டி: ஆட்சியர் தொடங்கி வைத்தார்
திங்கள் 20, ஏப்ரல் 2026 5:08:41 PM (IST)

சட்டமன்றப் பொதுத்தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, திருநெல்வேலியில் மாணவர்களுக்கான தேர்தல் விழிப்புணர்வு சதுரங்கப் போட்டியை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான இரா.சுகுமார் தொடங்கி வைத்தார்.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. முதல்முறை வாக்காளர்கள், மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுவதன் அவசியத்தை வலியுறுத்துவதே இதன் நோக்கமாகும்.
பாளையங்கோட்டை வேல்ஸ் வித்தியாலயா சிபிஎஸ்இ (CBSE) பள்ளியில் நடைபெற்ற இப்போட்டியில் ஏராளமான மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்களிடம் சட்டமன்றத் தேர்தலில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து மாவட்ட ஆட்சியர் உரையாற்றினார். தொடர்ந்து, தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு உறுதிமொழியினை அனைவரும் எடுத்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சரவணன், வருவாய் நீதிமன்றத் துணை ஆட்சியர் லதா, பள்ளி தாளாளர் செந்தில் பிரகாஷ், இயக்குனர் திலகவதி, முதல்வர் முருகேஷ், மேலாளர் செல்வராஜ் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தெற்கு ரயில்வேயின் புதிய தலைமை மக்கள் தொடர்பு அதிகாரியாக எஸ்.என். நரேன் நியமனம்!
புதன் 13, மே 2026 8:10:40 PM (IST)

கள்ளத்தொடர்பு விவகாரத்தில் இளம்பெண் கொலை: தம்பதி கைது - தூத்துக்குடியில் பயங்கரம்!
புதன் 13, மே 2026 5:21:10 PM (IST)

எடப்பாடி பழனிசாமி பதவி ஆசை: திமுகவுடன் கூட்டணி முயற்சி - சி.வி. சண்முகம் பரபரப்பு புகார்!
புதன் 13, மே 2026 4:57:47 PM (IST)

அமைச்சரவையில் நாடார் சமூக எம்.எல்.ஏ-க்களுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும்: சமக தீர்மானம்!
புதன் 13, மே 2026 4:53:34 PM (IST)

குதிரை பேரப் புகார்: தவெக தரம் தாழ்ந்த அரசியலில் ஈடுபடுவதாக மு.க. ஸ்டாலின் விமர்சனம்!
புதன் 13, மே 2026 4:21:55 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த ஆண்டு 50 பேர் குண்டர் சட்டத்தில் கைது!
புதன் 13, மே 2026 4:16:28 PM (IST)


