» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடி சிவன் கோவில் சித்திரை திருவிழா: ஏப்ரல் 21-ல் கொடியேற்றம்; 30-ல் தேரோட்டம்!

வியாழன் 9, ஏப்ரல் 2026 11:06:19 AM (IST)



தூத்துக்குடியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு கால்நாட்டு வைபவம் இன்று நடைபெற்றது.

தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவில் என்று அழைக்கப்படும் அன்னை ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை அருள்மிகு ஸ்ரீ சங்கர ராமேஸ்வரர் திருக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதப் பெருந்திருவிழா வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற ஏப்ரல் 21-ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கி, முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஏப்ரல் 30-ஆம் தேதி நடைபெறவுள்ளது. 

இதனை முன்னிட்டு, திருவிழாவின் தொடக்க நிகழ்வான கால்நாட்டு விழா கோவில் முன்பாக நேற்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவின் போது, நவதானியங்களை மண்ணில் இட்டு மங்கலப் பொருட்கள் முழங்க கால் நடும் நிகழ்வு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, சுவாமி மற்றும் அம்பாளுக்குச் சிறப்பு அலங்கார தீபாராதனைகள் காட்டப்பட்டன. இதற்கான பூஜை ஏற்பாடுகளை அர்ச்சகர்கள் செல்வம் மற்றும் சண்முகம் பட்டர்கள் செய்திருந்தனர். 

இந்நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் தமிழ்ச்செல்வி, ஆய்வாளர் ருக்மணி, மத்திய பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மோகன் ஐயர் ஆகியோர் பங்கேற்றனர். மேலும் முன்னாள் கவுன்சிலர் கந்தசாமி, பி.எஸ்.கே. ஆறுமுகம், சாந்தி, ரமேஷ் கிருஷ்ணன், நெல்லையப்பன் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருவிழாவுக்கான முன்னேற்பாடுகளைக் கோவில் நிர்வாகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory