» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அம்பை கோயில் கும்பாபிஷேக விழா: நகை பறிக்க முயன்ற 5 பெண்கள் கைது!

வெள்ளி 27, மார்ச் 2026 8:46:14 AM (IST)

அம்பை காசிநாத சுவாமி கோயில் கும்பாபிஷேக விழாவில், பக்தர்களிடம் நகை பறிக்க முயன்ற திருச்சியைச் சேர்ந்த 4 பெண்கள் உட்பட 5 பேரைத் தனிப்படை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள புகழ்மிக்க காசிநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் அம்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருட்டுச் சம்பவங்களைத் தவிர்க்க, கூட்ட நெரிசல் மிகுந்த இடங்களில் ஏற்கனவே நகை திருட்டில் ஈடுபட்டு கைதான பெண் குற்றவாளிகளின் புகைப்படங்கள் அடங்கிய விளம்பரப் பலகைகளை அம்பை போலீசார் வைத்திருந்தனர். மேலும், சாதாரண உடையில் போலீசார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

கும்பாபிஷேகம் முடிந்தவுடன் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித் திரிந்த 5 பெண்களைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் கூட்ட நெரிசலைப் பயன்படுத்திப் பக்தர்களிடம் நகை பறிக்கத் திட்டமிட்டிருந்தது அம்பலமானது.

திருச்சி சமயபுரம் பகுதியை சேர்ந்த பொன்மணி (வயது 37), இசக்கியம்மாள் (36), கவுதமி (35), லட்சுமி (35) மற்றும் நெல்லை மாவட்டம் வீரவநல்லூரை சேர்ந்த நாகேஸ்வரி ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களுடன் யாரும் வந்திருந்தார்களா? என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory