» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ராமநாதபுரம் சமஸ்தான ராணியிடம் ரூ.4.40 லட்சம் பறிமுதல்: திருச்செந்தூர் அருகே பரபரப்பு!
வெள்ளி 27, மார்ச் 2026 7:56:44 AM (IST)
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் சாமி தரிசனம் செய்ய வந்த ராமநாதபுரம் சமஸ்தான ராணியிடம் இருந்து, உரிய ஆவணங்கள் இல்லாத 4.40 லட்சம் ரூபாய் பணத்தைத் தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகனேரி சோதனைச் சாவடியில், தேர்தல் நிலையான கண்காணிப்புக் குழு அதிகாரிகள் நேற்று (வியாழக்கிழமை) தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த இரண்டு சொகுசு வாகனங்களை நிறுத்தி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
ஒரு வாகனத்தில் சென்னை அசோக் நகரைச் சேர்ந்த வீரராஜகுமார் என்பவரது மனைவி பிரம்மகிருஷ்ண ராஜராஜேஸ்வரி இருந்தார். விசாரணையில் அவர் ராமநாதபுரம் சமஸ்தானத்தின் ராணி என்பதும், திருச்செந்தூர் கோயிலுக்குச் சாமி தரிசனம் செய்ய வந்ததும் தெரியவந்தது. அவருடன் மற்றொரு வாகனத்தில் ராணியின் பாதுகாவலர்களும் வந்திருந்தனர்.
வாகனத்தைச் சோதனையிட்டபோது, அதில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ. 4.40 லட்சம் ரொக்கப் பணம் வைத்திருந்தது கண்டறியப்பட்டது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், அந்தப் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பணத்தைத் தேர்தல் அதிகாரிகள் திருச்செந்தூர் கோட்டாட்சியர் கௌதமிடம் முறைப்படி ஒப்படைத்தனர். உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் திருச்செந்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை மாநகரக் காவல் துறைக்கு ப்ரௌனி வருகை : பெயர் சூட்டி வரவேற்ற கமிஷனர்!
வெள்ளி 27, மார்ச் 2026 12:40:44 PM (IST)

நரிக்குறவர் சமூக மக்களிடையே 100% வாக்குப்பதிவு விழிப்புணர்வு: ஆட்சியர் தலைமையில் உறுதிமொழி!
வெள்ளி 27, மார்ச் 2026 12:35:37 PM (IST)

விஜய் முதலில் மன்னிப்பு கேட்கட்டும்: 5 கேள்விகளை எழுப்பி பொன்ராஜ் பதிலடி!
வெள்ளி 27, மார்ச் 2026 12:09:45 PM (IST)

பெண்கள் குறித்த சர்ச்சை பேச்சு: கடும் எதிர்ப்பால் மன்னிப்பு கோரினார் எஸ்.வி.சேகர்!
வெள்ளி 27, மார்ச் 2026 11:36:58 AM (IST)

அண்ணா பல்கலை. மாணவிக்கு பேராசிரியர் பாலியல் தொல்லை: அண்ணாமலை கடும் கண்டனம்
வெள்ளி 27, மார்ச் 2026 11:28:05 AM (IST)

தவெக பெண்கள் குறித்து பொன்ராஜ் சர்ச்சை பேச்சு: டிஜிபி அலுவலகத்தில் விஜய் புகார்!
வெள்ளி 27, மார்ச் 2026 10:37:27 AM (IST)

