» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மீன் வரத்து குறைவு: வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் தூத்துக்குடி மீனவர்கள்!
புதன் 11, பிப்ரவரி 2026 11:06:23 AM (IST)

தூத்துக்குடியில் மீன் வரத்து கடுமையாகக் குறைந்துள்ளதால், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்திலிருந்து மொத்தம் 272 விசைப்படகுகள் சுழற்சி முறையில் மீன்பிடிக்கச் சென்று வருகின்றன. வழக்கமாக அதிகாலை 5 மணிக்குக் கடலுக்குச் செல்லும் மீனவர்கள், இரவு 11 மணியளவில் கரை திரும்புவார்கள். இதன் மூலம் நாளொன்றுக்குச் சுமார் 20 கோடி ரூபாய் வரை மீன் ஏலம் நடைபெறும். கேரளாவிலிருந்து ஏராளமான வியாபாரிகள் இங்கு வந்து மீன்களை வாங்கிச் செல்வார்கள்.
இத்தொழிலை நம்பி விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் சுமார் 5,000 தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர். தற்போது கடலில் மீன்கள் வரத்து போதிய அளவில் இல்லாததால், மீனவர்கள் கடலுக்குச் செல்வது நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. கடந்த நான்கு தினங்களாக மீன் வரத்து மிகக் குறைவாக உள்ளதால், பெரும்பாலான விசைப்படகுகள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. தற்போது தினமும் 30 முதல் 50 படகுகள் மட்டுமே கடலுக்குச் செல்கின்றன.
இது குறித்து விசைப்படகு உரிமையாளர்கள் கூறுகையில், "ஒரு விசைப்படகு கடலுக்குச் சென்று வரச் சுமார் 2 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. மீன் வரத்து குறைந்ததால் டீசல் மற்றும் மீனவர்களுக்கான ஊதியத்தைக் கூட ஈட்ட முடிவதில்லை. நாள்தோறும் ஏற்படும் நஷ்டத்தைத் தவிர்க்கப் படகுகளைத் துறைமுகத்திலேயே நிறுத்தி வைத்துள்ளோம். இதனால் சுமார் 7,000-க்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகியுள்ளது. எனவே, அரசு உடனடியாக மானிய விலையில் டீசல் வழங்க வேண்டும் என்ற நீண்ட காலக் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்" எனத் தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகம் புதிய மைல் கல்: ஐஜிபிசி சான்றிதழ்கள் பெற்று சாதனை!!
புதன் 11, பிப்ரவரி 2026 8:27:11 PM (IST)

அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் அளித்த பெண் ஆஜராக நீதிமன்றம் நோட்டீஸ்!
புதன் 11, பிப்ரவரி 2026 12:14:53 PM (IST)

ஆட்சியில் பங்கு என்ற பேச்சுக்கே இடமில்லை : முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்
புதன் 11, பிப்ரவரி 2026 11:46:32 AM (IST)

ஜனநாயகன் சென்சார் விவகாரம்: உயர் நீதிமன்ற வழக்கை வாபஸ் பெற்ற தயாரிப்பு நிறுவனம்!
செவ்வாய் 10, பிப்ரவரி 2026 5:20:31 PM (IST)

தீராக்காதல் திருக்குறள் நாட்டிய நாடக நிகழ்ச்சி : சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்!
செவ்வாய் 10, பிப்ரவரி 2026 5:03:39 PM (IST)

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் எந்தப் பிரச்சினையும் இல்லை : கனிமொழி எம்.பி. பேச்சு
செவ்வாய் 10, பிப்ரவரி 2026 4:36:33 PM (IST)

