» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ரத்து செய்யப்பட்ட குரூப்-2 தேர்வுகள் மார்ச் 15-ம் தேதி நடைபெறும்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

செவ்வாய் 10, பிப்ரவரி 2026 11:09:00 AM (IST)

தமிழகம் முழுவதும் ரத்துசெய்யப்பட்ட குரூப்-2 மற்றும் குரூப்-2 ஏ மெயின் தேர்வுகள் மார்ச் 15-ம் தேதி நடைபெறும். ஹால் டிக்கெட் பிப். 11-ம் தேதி வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப்-2, குரூப்-2 ஏ மெயின் தேர்வு தமிழகம் முழுவதும் 38 மையங்களில் கடந்த 8-ம் தேதி காலையும், பிற்பகலும் நடைபெற இருந்தது. சென்னையில் தேர்வு மைய ஒதுக்கீட்டில் நடந்த குளறுபடி காரணமாக தமிழகம் முழுவதும் தேர்வு ரத்து செய்யப்பட்டது.

தொழில்நுட்ப காரணங்களால் தேர்வை நடத்த முடியாததால், தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும், வேறொரு தேதியில் தேர்வுகள் நடத்தப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்திருந்தது. அதன்படி, புதிய தேர்வுதேதி நேற்று அறிவிக்கப்பட்டது.

இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஏ.சண்முகசுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பிப்.8-ம் தேதி நடைபெற இருந்த குரூப்-2, குரூப்-2ஏ மெயின் தேர்வுகள் (தமிழ் மொழி தகுதித் தாள் தேர்வு மற்றும் பொது அறிவுத் தாள்) ரத்து செய்யப்பட்டு மறு தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த தேர்வுகளை மார்ச் 15-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அன்று காலை குரூப்-2ஏ தேர்வுக்கான பொது அறிவுத்தாள் தேர்வும், பிற்பகலில் குரூப்-2 மற்றும் குரூப்-2 ஏ தேர்வுகளுக்கான தமிழ் மொழி தகுதித்தாள் தேர்வும் நடைபெறும். இதற்கான ஹால் டிக்கெட் பிப்.28-ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்யப்படும். தேர்வர்கள் வழக்கமான முறையில் ஓடிஆர் எண்ணை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட தேர்வர்களுக்கு மின்னஞ்சல், குறுஞ்செய்தி மூலமாக தகவல் தெரிவிக்கப்படும். பிப்.22-ம் தேதி நடைபெறுவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட குரூப்-2 பொது அறிவுத் தாள் தேர்வு, திட்டமிட்டபடி அதே தேதியில் நடைபெறும். இதற்கான ஹால் டிக்கெட் பிப். 11-ம் தேதி (நாளை) வெளியிடப் படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory