» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டும்: சீமான் வலியுறுத்தல்
திங்கள் 1, டிசம்பர் 2025 10:30:10 AM (IST)
இலங்கையில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இலங்கையில் டிட்வா புயல் காரணமாக ஏற்பட்ட கடும் மழைப்பொழிவில் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு வாழும் தமிழர்கள் பலர் தங்களின் வீடு மற்றும் உடமைகளை இழந்து, உண்ண உணவின்றி தவித்து வருகின்றனர்.பாதுகாப்பாக தங்கவைக்க போதிய முகாம்கள்கூட இல்லாத நிலையில் மட்டைப்பந்தாட்ட மைதானத்தில்தங்க வைக்கப் பட்டுள்ள நிகழ்வு மனதை கனக்கச் செய்கிறது. இப்பேரிழப்பில் தங்களது உடமைகளை இழந்து தவிக்கும் தமிழர்களை மீட்க தமிழக அரசும், மத்திய அரசும் உடனடியாக உரிய வாழ்வாதார உதவிகளைப் புரிய வேண்டும்.
மேலும், இலங்கை விமான நிலையத்தில் கடந்த 3 நாட்களாக உணவுகூட கிடைக்காமல் தவித்து நிற்கும் 150 தமிழர்கள் உட்பட 300-க்கும் மேற்பட்ட மக்களை பாதுகாப்பாக தாயகம் மீட்டுவரவும், அதுவரை அவர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை உடனடியாக வழங்கவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி அருகே கார் மீது வேன் மோதல்: பெண் உயிரிழப்பு - 11 பேர் படுகாயம்!
திங்கள் 1, டிசம்பர் 2025 10:42:29 AM (IST)

காரைக்குடி அருகே அரசு பஸ்கள் நேருக்குநேர் மோதி கோர விபத்து: 11 பேர் உடல் நசுங்கி பலி
திங்கள் 1, டிசம்பர் 2025 8:34:22 AM (IST)

மகளிர் விடுதிக்குள் புகுந்து மனைவி வெட்டிக் கொலை : நெல்லை வாலிபர் வெறிச்செயல்!
திங்கள் 1, டிசம்பர் 2025 8:31:41 AM (IST)

சென்னையில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி விமானங்கள் வழக்கம்போல் இயக்கம்!
திங்கள் 1, டிசம்பர் 2025 8:29:22 AM (IST)

பஸ் ஏற முயன்ற பெண் பயணியிடம் ரூ.10 ஆயிரம் திருட்டு: மாமியார், மருமகள் கைது!
திங்கள் 1, டிசம்பர் 2025 8:26:43 AM (IST)

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த டிட்வா புயல்!
ஞாயிறு 30, நவம்பர் 2025 8:57:11 PM (IST)


.gif)