» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கலவை எந்திரம் மீது பைக் மோதிய விபத்தில் வாலிபர் பலி : தூத்துக்குடியில் பரிதாபம்!
செவ்வாய் 18, நவம்பர் 2025 12:04:17 PM (IST)
தூத்துக்குடியில் சாலையோரம் நிறுத்தியிருந்த கலவை எந்திரம் மீது பைக் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார்.
தூத்துக்குடி முத்தையாபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் மகன் மாரி தங்கம் (28), சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். நேற்று ஏரலில் வேலை செய்துவிட்டு பைக்கில் முத்தையாபுரத்திற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். தூத்துக்குடி - திருச்செந்தூர் ரோடு முள்ளக்காடு அருகே வரும்போது சாலையோரம் நிறுத்தியிருந்த கலவை எந்திரம் மீது பைக் மோதியது.
இவ்விபத்தில் பலத்த காயம் அடைந்த மாரித்தங்கம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து முத்தையாபுரம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சண்முக குமாரி வழக்கு பதிவு செய்து கலவை எந்திரத்தை அனுமதி இல்லாமல் சாலை ஓரத்தில் நிறுத்தியதாக தெற்கு சிலுக்கன்பட்டியை சேர்ந்த தாமோதரன் மகன் சரவண பெருமாள் (41) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அ.தி.மு.க., எம்.எல்.ஏ. சுதர்சனம் கொலை வழக்கில் 3 பேர் குற்றவாளிகள்- நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 21, நவம்பர் 2025 5:43:39 PM (IST)

அரசியல் கட்சிகளின் ரோடு ஷோக்களுக்கு வழிகாட்டு விதிமுறைகள்: தமிழக அரசு தாக்கல்!
வெள்ளி 21, நவம்பர் 2025 5:34:51 PM (IST)

இராதாபுரம் வட்டத்தில் ரூ.18.95 கோடியில் புதிய திட்டப் பணிகள் அடிக்கல் நாட்டுவிழா!
வெள்ளி 21, நவம்பர் 2025 4:41:13 PM (IST)

மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையை திமுக அரசு கவனக் குறைவாக அனுப்பியுள்ளது: எடப்பாடி பழனிசாமி
வெள்ளி 21, நவம்பர் 2025 4:22:15 PM (IST)

விஜய்யை நெருக்கடிக்கு உள்ளாக்க வேண்டாம் : சபாநாயகர் அப்பாவு பேட்டி!
வெள்ளி 21, நவம்பர் 2025 4:00:56 PM (IST)

சர்ச்சை பதிவு: ஆதவ் அர்ஜுனா மீதான வழக்கு ரத்து - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 21, நவம்பர் 2025 3:55:20 PM (IST)


.gif)