» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஜீன் 3 வரை 10 நாட்களுக்கு 3 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு: சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை!

வெள்ளி 23, மே 2025 8:12:47 AM (IST)

 மே 23 முதல் ஜீன் 3 வரை  கன்னியாகுமரி, கோவை, நீலகிரி மாவட்டங்களில் உள்ள ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் அறிவித்துள்ளார். 

சென்னையில் உள்ள தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளதால் மேற்கு கடற்கரை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மிக கனமழை பெய்யும்.

அதன்படி, மே 23 ந் தேதி முதல் ஜூன் 3 வரை 10 நாட்களுக்கு கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் - வால்பாறை, நீலகிரி - கூடலூர், கன்னியாகுமரி ஆகிய பகுதிகளுக்கு மிக கனமழை எச்சரிக்கை. சில இடங்களில் 24 மணி நேரத்தில் அதிகமாக 200 மி.மீ. மழை பெய்யக்கூடும்.

பொதுவாக இந்த பருவமழை அதிகரிப்பு ஜூன் மாதத்தில் ஏற்படும். ஆனால் அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடா பகுதிகளில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மழைக்கான அறிகுறியாக இருப்பதால் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் இது விடுமுறை காலம் என்பதால், குறிப்பாக அதிக மழை பெய்த பிறகு மேற்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள மலைகளுக்கு பயணிக்கும்போது சுற்றுலாப் பயணிகள் எச்சரிக்கையுடன் பயணிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதனால் இடுக்கி, குடகு, வயநாடு, நீலகிரியில் உள்ள கூடலூர் - அவலாஞ்சி பகுதி, வால்பாறை, சிக்மகளூர் மலைகள், கர்நாடக கடலோரப் பகுதிகள், உடுப்பி, ஷிமோகா மலைகள், உத்தர கன்னடம், வடக்கு கடற்கரை கேரளா போன்ற இடங்கள் அதிக ஆபத்தில் உள்ளன.

கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, சிறுமலை, கொல்லிமலை, மேகமலை ஆகியவை பயணிக்க பாதுகாப்பானவை. மேற்கு கடற்கரை மற்றும் மலைத் தொடர்களில் பருவமழை ஆரம்பித்த உடன் சென்னையில் மழைக்கு வாய்ப்பு குறைய ஆரம்பித்து விடும் என்று வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தனது எக்ஸ் தளத்தில் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory