» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கண்மாய், குளங்களிலிருந்து மண் எடுத்துச் செல்ல அனுமதி : ஆட்சியர் இரா.சுகுமார் தகவல்!
வெள்ளி 23, மே 2025 10:59:59 AM (IST)
திருநெல்வேலி மாவட்டத்தில் கண்மாய், குளங்களிலிருந்து விவசாயம் மற்றும் மண்பாண்ட தொழில் பயன்பாட்டிற்கு கட்டணம் இல்லாமல் மண் வெட்டி எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆட்சியர் இரா.சுகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரசாணை எண்.14, இயற்கை வளங்கள் துறை, நாள். 12.06.2024-ல்குறிப்பிட்டுள்ளவாறு பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறைகளின் பராமரிப்பில் உள்ள கண்மாய் / குளங்களிலிருந்து விவசாயம் மற்றும் மண்பாண்ட தொழில் பயன்பாட்டிற்கு கட்டணம் இல்லாமல் மண் / வண்டல் மண் வெட்டி எடுப்பதற்காக தகுதி வாய்ந்த 677 குளங்கள் கண்டறியப்பட்டு திருநெல்வேலி மாவட்ட அரசிதழ் சிறப்பு வெளியீடு எண். 03, நாள். 28.04.2025-ன் படி அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது.
விவசாய பயன்பாட்டிற்காக நஞ்சை நிலங்களை மேம்படுத்தும் வகைக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை 1 ஏக்கர் நிலத்திற்கு 75 கன மீட்டர் அளவும், புஞ்சை நிலத்திற்கு 90 கன மீட்டர் அளவும், மேலும் மண்பாண்ட தொழில் பயன்பாட்டிற்கு 60 கன மீட்டர் அளவும் மற்றும் சொந்த பயன்பாட்டிற்கு 30 கன மீட்டர் அளவும் கட்டணமில்லாமல் வெட்டி எடுத்து பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
எனவே இச்சலுகையினை பயன்படுத்தி விவசாயிகள் தங்களது நிலத்தின் தரத்தினை மேம்படுத்தும் வகைக்கு தங்களது விவசாயம் நிலம் தொடர்பான 10(1) சிட்டா அடங்கல் மற்றும் புலப்பட நகல் ஆகியவற்றுடனும், மண்பாண்ட தொழிலாளர்கள் சங்க உறுப்பினர் அடையாள அட்டை மற்றும் சான்றுகளுடனும், உரிய படிவத்தில் tnesevai.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக சம்பந்தப்பட்ட வருவாய் வட்டாட்சியர்களுக்கு விண்ணப்பித்து மண் வெட்டி எடுத்துச் செல்ல அனுமதி பெற்று கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.சுகுமார் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நீலகிரிக்கு மே 25, 26ல் ரெட் அலர்ட் : முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்!!
வெள்ளி 23, மே 2025 5:39:43 PM (IST)

தோல்வியே காணாத வரலாற்றுச் சிறப்புமிக்க வாகை நாயகர் பெரும்பிடுகு முத்தரையர்: விஜய் புகழாரம்
வெள்ளி 23, மே 2025 11:47:43 AM (IST)

நகைக்கடனுக்கான புதிய விதிகளை திரும்பப் பெற வேண்டும் : எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
வெள்ளி 23, மே 2025 11:38:43 AM (IST)

டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை எல்லை மீறி செயல்படுகிறது: சபாநாயகர் அப்பாவு
வெள்ளி 23, மே 2025 11:21:28 AM (IST)

தொல்லியல், வரலாற்று சின்னங்களை பாதுகாக்க புதிய ஆணையம்: தமிழ்நாடு அரசு திட்டம்
வெள்ளி 23, மே 2025 10:26:02 AM (IST)

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதியில் மாற்றம் இல்லை : கல்வித்துறை தகவல்
வெள்ளி 23, மே 2025 8:41:42 AM (IST)
