» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தோல்வியே காணாத வரலாற்றுச் சிறப்புமிக்க வாகை நாயகர் பெரும்பிடுகு முத்தரையர்: விஜய் புகழாரம்
வெள்ளி 23, மே 2025 11:47:43 AM (IST)

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1350-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவை போற்றுவோம் என்று தவெக தலைவர் நடிகர் விஜய் புகழாரம் சூட்டியுள்ளார்.
இது தொடர்பாக விஜய் வெளியிட்டுள்ள பதிவில், 'தமிழ் நிலத்தில் போரில் வென்ற மன்னர்கள் வாகை மலர் சூடி மகிழ்வார்கள். அக்காலத்தில், தன்னுடைய போர்த்திற வெற்றியைத் தன்னம்பிக்கையுடன் உறுதி செய்து, போருக்குச் செல்லும் முன்பே வாகை மலர் சூடிச் சென்றவர், மாமன்னர் பெரும்பிடுகு முத்தரையர்.
தோல்வியே காணாத வரலாற்றுச் சிறப்புமிக்க வாகை நாயகர். அரசர்களுக்கு எல்லாம் பேரரசராகத் திகழ்ந்த அரச வாகை கொண்ட பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் பிறந்த நாளில், தமிழ் மண்ணுக்கும் தமிழர் உரிமைக்கும் அவர் ஆற்றிய சேவைகளைப் போற்றி மகிழ்வோம்' இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நீலகிரிக்கு மே 25, 26ல் ரெட் அலர்ட் : முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்!!
வெள்ளி 23, மே 2025 5:39:43 PM (IST)

நகைக்கடனுக்கான புதிய விதிகளை திரும்பப் பெற வேண்டும் : எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
வெள்ளி 23, மே 2025 11:38:43 AM (IST)

டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை எல்லை மீறி செயல்படுகிறது: சபாநாயகர் அப்பாவு
வெள்ளி 23, மே 2025 11:21:28 AM (IST)

கண்மாய், குளங்களிலிருந்து மண் எடுத்துச் செல்ல அனுமதி : ஆட்சியர் இரா.சுகுமார் தகவல்!
வெள்ளி 23, மே 2025 10:59:59 AM (IST)

தொல்லியல், வரலாற்று சின்னங்களை பாதுகாக்க புதிய ஆணையம்: தமிழ்நாடு அரசு திட்டம்
வெள்ளி 23, மே 2025 10:26:02 AM (IST)

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதியில் மாற்றம் இல்லை : கல்வித்துறை தகவல்
வெள்ளி 23, மே 2025 8:41:42 AM (IST)
