» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பாமக தலைவர் பதவியிலிருந்து அன்புமணி நீக்கம்: ராமதாஸ் அறிவிப்பு
வியாழன் 10, ஏப்ரல் 2025 12:18:58 PM (IST)
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக தானே செயல்படப் போவதாகவும், அன்புமணி ராமதாஸ், செயல் தலைவராக நியமிக்கப்படுவதாகவும் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

தேர்தல் கூட்டணி குறித்து நிர்வாகக் குழு, செயற் குழு, மாவட்டச் செயலாளர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தைக் கூட்டி முடிவு எடுக்கப்படும். தலைவர் பதவியை நானே எடுத்துக் கொண்டதற்கு பல காரணங்கள் உண்டு. அதனை உங்களுடன் தற்போது பகிர முடியாது” என்றார்.
2022 ஆம் ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து பாமக தேர்தலை சந்தித்தது. ஆனால், ஒரு தொகுதியில்கூட வெல்லவில்லை. இதையடுத்து, பாமகவின் 2025- ஆம் புத்தாண்டு சிறப்பு பொதுக் குழுக் கூட்டம் பட்டனூரில் நடைபெற்றது. அப்போது பாமகவின் இளைஞரணித் தலைவராக தனது மகள் வழிப் பேரன் ப . முகுந்தனை நியமிப்பதாக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார்.
இதற்கு கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்து, கட்சியில் சேர்ந்து 4 மாதங்களே ஆன நிலையில், அவருக்கு பதவி தருவதற்கு பதிலாக, சுறுசுறுப்பாக பணியாற்றக் கூடிய நபருக்கு அப்பதவியை வழங்கலாம் என்று மேடையிலேயே தெரிவித்து பேசினார். உடனடியாக ராமதாஸ், என்னால் உருவாக்கப்பட்ட கட்சி இது. அவர் இளைஞர் சங்கத் தலைவராக நியமிக்கப்படுகிறார் என மீண்டும் பேசினார்.
இதையடுத்து பனையூரில் உள்ள அலுவலகத்தில் தொண்டர்கள் என்னை சந்திக்கலாம் என அறிவித்த அன்புமணி ராமதாஸ், மேடைடையிலிருந்து வெளியேறி சென்னைக்கு புறப்பட்டு சென்றார். இதையடுத்து, திண்டிவனம் அருகிலுள்ள தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையேயான சமாதானப் பேச்சுவார்த்தையை கட்சி நிர்வாகிகளும் குடும்பத்தினரும் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்தில் 2026லும் திராவிட மாடல் ஆட்சிதான்: முதல்வர் ஸ்டாலின் உறுதி!!
வெள்ளி 18, ஏப்ரல் 2025 3:56:05 PM (IST)

வீடுபுகுந்து மூதாட்டியிடம் நகை, பணம் பறிப்பு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
வெள்ளி 18, ஏப்ரல் 2025 3:23:38 PM (IST)

மக்கள் தொடர்பு முகாமில் ரூ.89.75 இலட்சம் நலதிட்ட உதவிகள்: ஆட்சியர் வழங்கினார்.
வெள்ளி 18, ஏப்ரல் 2025 12:45:53 PM (IST)

தமிழ் வழிக் கல்வியில் படித்தவர்களுக்கு 20 சதவீதம் முன்னுரிமை: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
வெள்ளி 18, ஏப்ரல் 2025 12:24:38 PM (IST)

திருப்பதிக்கு நிகராக திருச்செந்தூர் கோவில் வடிவமைப்பு : தமிழக முதல்வருக்கு சேகர்பாபு புகழாரம்
வெள்ளி 18, ஏப்ரல் 2025 8:58:07 AM (IST)

அமைச்சர் பொன்முடி மீது வழக்குப்பதிவு: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
வியாழன் 17, ஏப்ரல் 2025 5:50:13 PM (IST)
