» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பிரசாந்த் கிஷோர் விஜய்யுடன் இணைந்ததால் திமுகவுக்கு சிக்கல் இல்லை: கனிமொழி எம்.பி. பேட்டி
வியாழன் 13, பிப்ரவரி 2025 8:46:01 AM (IST)
பிரசாந்த் கிஷோர் விஜய்யுடன் இணைந்ததால் எங்களுக்கு எந்தவித சிக்கலும் இல்லை என்று கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.

கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசியதாவது: உள்ளாட்சிகளில் 50 சதவீதம் ஆட்சி பொறுப்பில் இருக்கக்கூடிய வாய்ப்புகளை நாம் பெற்றிருக்கிறோம். ஆனால் பல நாடுகளில் ஓட்டுப்போட கூட உரிமை கிடையாது. நம்முடைய முன்னேற்றத்தில் அக்கறை உள்ள ஆட்சி இருந்தால்தான் இவ்வளவும் பெற முடியும்.
பெண்களின் கனவை புரிந்துகொள்ளும் தி.மு.க.தான் வரக்கூடிய தேர்தலிலும் ஆட்சிக்கு வர வேண்டும். ஏனெனில் பெண்களின் எதிர்காலத்தை பற்றி சிந்திக்கும் ஒரே கட்சி தி.மு.க.தான். தமிழ்நாடு என்ற பெயர் ஒரு இடத்தில்கூட உச்சரிக்கப்படவில்லை. தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதும் எந்த மாநிலத்திற்கும் நூறுநாள் வேலைக்கான நிதியை தருவதில்லை.
நம்மிடம் இருந்து ஜி.எஸ்.டி. என்ற பெயரில் 1 ரூபாய் வாங்கி அதற்கு 28 பைசா கூட சரியாக தருவதில்லை. தமிழ்நாட்டிற்கு நிதிச்சுமையை ஏற்படுத்தி பா.ஜனதா அரசு தொடர்ந்து ஓரவஞ்சணை செய்து வருகிறது.
தமிழர்களின் உரிமையை விட்டுக்கொடுக்காமல் அடுத்தடுத்த தலைமுறையினர் பயன்பெறும் வகையில் எண்ணற்ற திட்டங்கள், நம்முடைய ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டம் முடிந்த பின்பு கனிமொழி எம்.பி., நிருபர்களிடம் கூறுகையில், பிரசாந்த் கிஷோர், தொழில் ரீதியாக யார் அழைத்தாலும் அவருடன் இணைந்து செயல்படுவார். அதைப்பற்றி எங்களுக்கு கவலை இல்லை. திராவிட முன்னேற்ற கழகம், எங்கள் கட்சியின் உடன்பிறப்புகளை நம்பித்தான் தேர்தலை சந்திக்கிறது.
முதல்-அமைச்சர் எந்த வழியை காட்டுகிறாரோ அந்த வழியில் செயல்பட தி.மு.க. தொண்டர்கள் தயாராக இருக்கிறார்கள். பிரசாந்த் கிஷோர் விஜய்யுடன் இணைந்ததால் எங்களுக்கு எந்தவித சிக்கலும் இல்லை என்றார்.
மக்கள் கருத்து
விஜய்யுடன்Feb 13, 2025 - 11:19:28 AM | Posted IP 162.1*****
விடியலுக்கு வந்த சோதனை, விஜயை பார்த்து பயம்.
மேலும் தொடரும் செய்திகள்

வைகை, பல்லவன் ரயில்களில் ஒரு முன்பதிவு பெட்டி பொதுப்பெட்டியாக மாற்றம்
வெள்ளி 14, மார்ச் 2025 12:08:45 PM (IST)

டாஸ்மாக் ஊழலுக்கு பொறுப்பேற்று திமுக அரசு பதவி விலக வேண்டும் : எடப்பாடி பழனிச்சாமி
வெள்ளி 14, மார்ச் 2025 11:56:12 AM (IST)

இருசக்கர மின் வாகனத்துக்கு ரூ.20 ஆயிரம் மானியம்: தமிழக நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு
வெள்ளி 14, மார்ச் 2025 10:58:29 AM (IST)

துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி இளம்பெண்ணை கொன்ற கணவர்: குடும்ப தகராறில் பயங்கரம்!
வெள்ளி 14, மார்ச் 2025 8:46:13 AM (IST)

ஏரல் ஆற்றுப்பாலத்தில் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் : ஆட்சியர் இளம்பகவத் உத்தரவு
வெள்ளி 14, மார்ச் 2025 8:40:45 AM (IST)

நெல்லை-திருச்செந்தூர் இடையே 2 ரயில்கள் மார்ச் 20 முதல் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு!
வியாழன் 13, மார்ச் 2025 8:36:12 PM (IST)

மீடியாவில் வந்தவைFeb 14, 2025 - 05:16:45 PM | Posted IP 172.7*****