» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
ரேஷன் கடைகளில் இணையதளச் சேவை முடக்கம் : பொதுமக்கள் – ஊழியர்கள் இடையே வாக்குவாதம்!
செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 10:13:05 AM (IST)

தூத்துக்குடியில் உள்ள நியாயவிலைக் கடைகளில் கடந்த ஒரு வார காலமாகச் 'சர்வர்' மற்றும் இணையதளச் சேவை முடங்கியுள்ளதால், பொதுமக்களுக்கும் கடைப் பணியாளர்களுக்கும் இடையே தொடர்ந்து வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு (ஸ்மார்ட் கார்டு) கைரேகை (பயோமெட்ரிக்) பதிவு செய்யப்பட்டு, இணையவழி மூலமாகவே அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. தூத்துக்குடி மாநகர் மற்றும் மாவட்டப் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் கடந்த ஒரு வார காலமாக இணையதளச் சேவை (Server Problem) மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
சர்வர் இயங்காததால் ஒரு நாளைக்கு ஒரு கடையில் 2 முதல் 6 குடும்ப அட்டைகளுக்கு மட்டுமே கைரேகை பதிவு செய்ய முடிவதாக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.பொருட்கள் வாங்க நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் பொதுமக்கள், கைரேகை பதிவு செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்புவதால், கடைப் பணியாளர்களுடன் தினந்தோறும் வாக்குவாதத்தில் ஈடுபடும் சூழல் உருவாகியுள்ளது.
தூத்துக்குடி பகுதியில் மட்டும் சுமார் 115 நியாயவிலைக் கடைகள் இயங்கி வருகின்றன. இந்த இணையதள முடக்கப் பிரச்சனைக்குத் தமிழக அரசு உடனடியாக நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்றும், இல்லையெனில் பொதுமக்கள் மற்றும் ஊழியர்களுக்கிடையே தேவையற்ற மோதல் போக்கு தொடரும் என்றும் நியாயவிலைக் கடைப் பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஸ்ரீநாராயண குரு ஜெயந்தி: குமரி மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 28-ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 3:49:18 PM (IST)

நாகர்கோவிலில் 50 மாணவிகளுக்குச் சிலம்பப் பயிற்சி : சான்றிதழ்களை வழங்கி ஆட்சியர் பிரதாப் பாராட்டு!
செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 12:47:40 PM (IST)

முறையான நம்பர் பிளேட் இல்லாத 18 வாகனங்கள் பறிமுதல்: குமரி மாவட்ட காவல்துறை அதிரடி!
செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 11:57:15 AM (IST)

வாணியக்குடியில் 21ஆம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியர் தகவல்
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 5:13:26 PM (IST)

பத்மநாபபுரம் அரண்மனையில் ஓணம் திருவிழா தொடக்கம்: 10 நாட்கள் கோலாகலம்!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 5:10:20 PM (IST)

செல்போனை பறிமுதல் செய்ததால் விரக்தி: கல்லூரி மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 3:49:43 PM (IST)



அமேசான்Aug 18, 2026 - 03:02:47 PM | Posted IP 104.2*****