» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

திருமண ஆசை காட்டிப் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை : வழக்கறிஞர் கேரளாவில் கைது!

திங்கள் 17, ஆகஸ்ட் 2026 8:37:34 AM (IST)

திருமண ஆசை காட்டிப் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கறிஞரைக் கேரள மாநிலம் கொச்சியில் வைத்துக் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், நாகர்கோவிலில் உள்ள மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், நாகர்கோவில் மறவன்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் சகாய அரசு (27) என்பவருடன் தனக்குப் பழக்கம் ஏற்பட்டதாகவும், அவர் தன்னைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மனு குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த மகளிர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில் கேரள மாநிலம் கொச்சியில் தலைமறைவாக இருந்த வழக்கறிஞர் சகாய அரசைப் காவல்துறையினர் கைது செய்து நேற்று காலை நாகர்கோவிற்குக் கொண்டு வந்தனர்.

கைது செய்யப்பட்ட சகாய அரசுக்கு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory