» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
ஸ்ரீநாராயண குரு ஜெயந்தி: குமரி மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 28-ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 3:49:18 PM (IST)

ஸ்ரீநாராயண குருவின் பிறந்தநாளை முன்னிட்டு வருகிற 28-ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் உத்தரவிட்டுள்ளார்.
கேரள மறுமலர்ச்சியின் தந்தையாகப் போற்றப்படும் ஸ்ரீநாராயண குருவைப் பின்பற்றுபவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் பெருமளவில் வாழ்ந்து வருகின்றனர். இதனால், அவரது அவதார தினமான ஸ்ரீநாராயண குரு ஜெயந்தியை முன்னிட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் அமைப்புகள் சார்பில் நீண்ட நாட்களாகக் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, வருகிற ஆகஸ்ட் 28-ஆம் தேதி (28.08.2026) கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில், வரவிருக்கும் செப்டம்பர் 12-ஆம் தேதி (12.09.2026) சனிக்கிழமை அன்று வழக்கமான வேலை நாளாகச் செயல்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவிலில் 50 மாணவிகளுக்குச் சிலம்பப் பயிற்சி : சான்றிதழ்களை வழங்கி ஆட்சியர் பிரதாப் பாராட்டு!
செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 12:47:40 PM (IST)

முறையான நம்பர் பிளேட் இல்லாத 18 வாகனங்கள் பறிமுதல்: குமரி மாவட்ட காவல்துறை அதிரடி!
செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 11:57:15 AM (IST)

வாணியக்குடியில் 21ஆம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியர் தகவல்
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 5:13:26 PM (IST)

பத்மநாபபுரம் அரண்மனையில் ஓணம் திருவிழா தொடக்கம்: 10 நாட்கள் கோலாகலம்!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 5:10:20 PM (IST)

செல்போனை பறிமுதல் செய்ததால் விரக்தி: கல்லூரி மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 3:49:43 PM (IST)

திருமண ஆசை காட்டிப் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை : வழக்கறிஞர் கேரளாவில் கைது!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 8:37:34 AM (IST)


