» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கூடங்குளம் அணு உலையில் வடிகால் அமைப்பிற்குள் நுழைந்த ஜெல்லி மீன்கள்: மின் உற்பத்தி நிறுத்தம்!
செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 8:33:58 AM (IST)

நெல்லை மாவட்டம் கூடங்குளம் 2-வது அணு உலையின் வடிகால் அமைப்பிற்குள் ஜெல்லி மீன்கள் புகுந்ததால் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மின் உற்பத்தி திடீரென நிறுத்தப்பட்டது.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ரஷிய நாட்டுத் தொழில்நுட்ப உதவியுடன் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் மூலம் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. மேலும், 4 புதிய அணு உலைகள் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இங்குள்ள அணு உலைகளைக் குளிர்விப்பதற்காக 'ஈரப்பத பிரிப்பான் வடிகால் அமைப்பு' (Moisture Separator Drainage System) செயல்பட்டு வருகிறது. இதில் சக்திவாய்ந்த மோட்டார்கள் மூலம் கடல்நீர் உறிஞ்சப்பட்டு அணு உலைகள் குளிர்விக்கப்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம் காலையில், 2-வது அணு உலையின் ஈரப்பத பிரிப்பான் வடிகால் அமைப்பிற்குள் ஏராளமான ஜெல்லி மீன்கள் திடீரெனப் புகுந்தன.
ஜெல்லி மீன்கள் வடிகால் அமைப்பை அடைத்துக் கொண்டதால், உடனடியாகத் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2-வது அணு உலையில் மின் உற்பத்தி உடனடியாக நிறுத்தப்பட்டது.
தகவலறிந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு, வடிகால் அமைப்பில் சிக்கியிருந்த ஜெல்லி மீன்களை அகற்றி அக்கோளாறைச் சரி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். சுமார் 4 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு தொழில்நுட்பக் கோளாறு முழுமையாகச் சரிசெய்யப்பட்டு, 2-வது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஸ்ரீநாராயண குரு ஜெயந்தி: குமரி மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 28-ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 3:49:18 PM (IST)

நாகர்கோவிலில் 50 மாணவிகளுக்குச் சிலம்பப் பயிற்சி : சான்றிதழ்களை வழங்கி ஆட்சியர் பிரதாப் பாராட்டு!
செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 12:47:40 PM (IST)

முறையான நம்பர் பிளேட் இல்லாத 18 வாகனங்கள் பறிமுதல்: குமரி மாவட்ட காவல்துறை அதிரடி!
செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 11:57:15 AM (IST)

வாணியக்குடியில் 21ஆம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியர் தகவல்
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 5:13:26 PM (IST)

பத்மநாபபுரம் அரண்மனையில் ஓணம் திருவிழா தொடக்கம்: 10 நாட்கள் கோலாகலம்!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 5:10:20 PM (IST)

செல்போனை பறிமுதல் செய்ததால் விரக்தி: கல்லூரி மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 3:49:43 PM (IST)


