» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
காதல் மனைவியுடன் தகராறு: வாலிபர் தற்கொலை!
திங்கள் 6, ஜூலை 2026 10:45:25 AM (IST)
தூத்துக்குடியில் மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி திரேஸ்புரம் சிலுவையார்கோவில் தெருவைச் சேர்ந்த பெனிக்ஸ் குடும்பத்தைச் சேர்ந்த டென்சிங் (29). இவரது மனைவி சுபிஷா (27). இருவரும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது. டென்சிங்கிற்கு அடிக்கடி மனைவியின் மீது சந்தேகம் ஏற்பட்டு சண்டை போடுவது வழக்கமாக இருந்துள்ளது.
இந்நிலையில், நேற்று குடிபோதையில் இருந்த டென்சிங், சுபிஷாவை அடித்துத் துன்புறுத்தி வீட்டின் உள்ளே தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் சுபிஷா அவரது அண்ணன் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் மனமுடைந்த டென்சிங் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து வடபாகம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை - விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு
செவ்வாய் 7, ஜூலை 2026 4:43:28 PM (IST)

மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ் குமார் ஆய்வு
செவ்வாய் 7, ஜூலை 2026 12:44:21 PM (IST)

மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் : ரூ.2.79 இலட்சம் மதிப்பில் நலதிட்ட உதவிகள்
திங்கள் 6, ஜூலை 2026 5:51:33 PM (IST)

கன்னியாகுமரி புதிய டிஎஸ்பி பிரகாஷ் பொறுப்பேற்பு!
திங்கள் 6, ஜூலை 2026 3:48:24 PM (IST)

சின்னமுட்டம் துறைமுகத்தில் மீனவர்களிடையே பயங்கர மோதல்: கல்வீச்சு தாக்குதலில் 5பேர் காயம்!
திங்கள் 6, ஜூலை 2026 12:01:28 PM (IST)

மீன்பிடி வலையில் சிக்கிய 7 அடி நீள மலைப்பாம்பு: பெரியகுளத்தில் பரபரப்பு!
ஞாயிறு 5, ஜூலை 2026 1:59:24 PM (IST)



காதோல்Jul 7, 2026 - 04:27:35 PM | Posted IP 162.1*****