» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
காதல் மனைவியுடன் தகராறு: வாலிபர் தற்கொலை!
திங்கள் 6, ஜூலை 2026 10:45:25 AM (IST)
தூத்துக்குடியில் மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி திரேஸ்புரம் சிலுவையார்கோவில் தெருவைச் சேர்ந்த பெனிக்ஸ் குடும்பத்தைச் சேர்ந்த டென்சிங் (29). இவரது மனைவி சுபிஷா (27). இருவரும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது. டென்சிங்கிற்கு அடிக்கடி மனைவியின் மீது சந்தேகம் ஏற்பட்டு சண்டை போடுவது வழக்கமாக இருந்துள்ளது.
இந்நிலையில், நேற்று குடிபோதையில் இருந்த டென்சிங், சுபிஷாவை அடித்துத் துன்புறுத்தி வீட்டின் உள்ளே தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் சுபிஷா அவரது அண்ணன் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் மனமுடைந்த டென்சிங் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து வடபாகம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசுப் பேருந்தில் 6 பவுன் தங்கச் சங்கிலி திருட்டு: பெண்கள் இருவர் அதிரடி கைது!
திங்கள் 20, ஜூலை 2026 12:25:31 PM (IST)

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் தொழில் பழகுநர் பயிற்சி: பட்டதாரிகள் விண்ணப்பிக்க அழைப்பு!
வெள்ளி 17, ஜூலை 2026 4:42:15 PM (IST)

நாகர்கோவில் - கோவை அதிவிரைவு ரயிலில் கூடுதலாக ஒரு படுக்கை வசதிப் பெட்டி தற்காலிக இணைப்பு!
வெள்ளி 17, ஜூலை 2026 4:25:32 PM (IST)

நாகர்கோவில் கிளைச் சிறையில் கைதிகளின் பாதுகாப்பு கேள்விக்குறி: சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு!
வெள்ளி 17, ஜூலை 2026 3:43:19 PM (IST)

இந்து முன்னணி நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு: மாநிலத் துணைத் தலைவர் கண்டனம்!
வெள்ளி 17, ஜூலை 2026 11:01:05 AM (IST)

சென்னை - கன்னியாகுமரி புல்லட் ரயில் திட்டம்: நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வலியுறுத்தல்!
வியாழன் 16, ஜூலை 2026 4:59:47 PM (IST)



காதோல்Jul 7, 2026 - 04:27:35 PM | Posted IP 162.1*****