» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
அரசுப் பேருந்து மீது மர்ம நபர்கள் கல் வீசித் தாக்குதல் : குமரி - கேரள எல்லைப் பகுதியில் பரபரப்பு!
சனி 4, ஜூலை 2026 5:54:47 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை பணிமனையைச் சார்ந்த அரசுப் பேருந்து ஒன்று, குமரி - கேரள எல்லைப் பகுதி வழியாகப் பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது எல்லைப் பகுதியில் மறைந்திருந்த மர்ம நபர்கள் சிலர், திடீரென அரசுப் பேருந்தை நோக்கிப் பெரிய கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர்.
இந்தத் தாக்குதலில் பேருந்தின் முன் பக்கக் கண்ணாடி சுக்குநூறாக உடைந்து சேதமடைந்தது. நல்வாய்ப்பாகப் பேருந்தில் இருந்த ஓட்டுநர், நடத்துநர் மற்றும் பயணிகள் அனைவரும் பெரும் காயங்கள் ஏதுமின்றி உயிர் தப்பினர். இச்சம்பவம் எல்லைப் பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கல் வீச்சுச் சம்பவம் குறித்துப் பேருந்து ஓட்டுநர் எல்லைப் பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, அரசுப் பேருந்து மீது கல் வீசித் தாக்குதல் நடத்திவிட்டுத் தலைமறைவான மர்ம நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். எல்லைப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா (CCTV) காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருவனந்தபுரம் - வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரயில் அறிவிப்பு: நாகர்கோவில் வழியாக இயக்கம்!
சனி 22, ஆகஸ்ட் 2026 3:42:08 PM (IST)

ஓணம் பண்டிகை எதிரொலி: தோவாளை பூச்சந்தையில் பூக்கள் விலை கடும் உயர்வு!
சனி 22, ஆகஸ்ட் 2026 10:55:23 AM (IST)

தேங்காய்பட்டணத்தில் ரூ. 5 கோடியில் புதிய சுற்றுலாத்தளம்: ஆட்சியர் மு.பிரதாப் ஆய்வு!
வெள்ளி 21, ஆகஸ்ட் 2026 5:09:06 PM (IST)

சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதியில் ஆவணி திருவிழா தொடங்கியது: ஆக.31ல் தேரோட்டம்!
வெள்ளி 21, ஆகஸ்ட் 2026 4:27:31 PM (IST)

கனிமவளங்களை ஏற்றி வந்த 5 கனரக லாரிகளை பொதுமக்கள் சிறைபிடிப்பு: போலீசில் ஒப்படைப்பு!
வியாழன் 20, ஆகஸ்ட் 2026 5:16:57 PM (IST)

நர்சிங் மாணவி தற்கொலை விவகாரம்: கல்லூரி முதல்வர் கைது - கல்லூரி விடுமுறை நீட்டிப்பு!
வியாழன் 20, ஆகஸ்ட் 2026 11:53:27 AM (IST)


