» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
மதுரை - புனலூர் எக்ஸ்பிரஸ் வேளாங்கண்ணி வரை நீட்டிப்பு: குமரி, நெல்லை பயணிகள் எதிர்பார்ப்பு!
வியாழன் 7, மே 2026 12:36:11 PM (IST)

மதுரை - நாகர்கோவில் வழியாக புனலூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலை வேளாங்கண்ணி வரை நீட்டித்து இயக்க வேண்டும் என கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் தெற்கு ரயில்வேக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
தற்போது இயக்கப்படும் வேளாங்கண்ணி ரயில்கள் பெரும்பாலும் செங்கோட்டை, ராஜபாளையம் வழியாகவே இயக்கப்படுகின்றன.
இதனால் கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களைச் சேர்ந்த பயணிகள் வேளாங்கண்ணிக்கு நேரடி ரயில் வசதி இன்றி கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
திருவனந்தபுரம் - வேளாங்கண்ணி சிறப்பு ரயிலையாவது நாகர்கோவில், நெல்லை வழியாக இயக்க வேண்டும் என்ற கோரிக்கையும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகப் பயணிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
கோரிக்கையின் முக்கியத்துவம்:
நீட்டிப்பு வசதி: மதுரை - புனலூர் ரயில் தற்போது 410 கி.மீ மட்டுமே பயணிக்கிறது. இதன் வேகத்தை அதிகரித்து, திருச்சி, தஞ்சாவூர் வழியாக வேளாங்கண்ணி வரை நீட்டித்தால் டெல்டா மாவட்டங்களுக்கு நேரடி இணைப்பு கிடைக்கும்.
இருவழிப்பாதை பலன்: இரணியல் முதல் தஞ்சாவூர் வரை இருவழிப்பாதை பணிகள் நிறைவடைந்துள்ளதால், ரயில்கள் கிராசிங்கிற்காகக் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதனால் பயண நேரத்தைக் குறைத்து ரயிலை விரைவாக இயக்க முடியும்.
ஆன்மிகப் பயணம்: குமரி, நெல்லை மாவட்டங்களிலிருந்து வேளாங்கண்ணி மாதா கோவில், நாகூர் தர்கா, திருநள்ளாறு சனி பகவான் ஆலயம் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு இது வரப்பிரசாதமாக அமையும்.
திருச்சிக்கு நேரடி ரயில்: தற்போது இந்த மாவட்டங்களிலிருந்து திருச்சிக்குச் செல்லும் ரயில்கள் பெரும்பாலும் நள்ளிரவு நேரத்தில் இருப்பதால், இந்த ரயிலை நீட்டிப்பதன் மூலம் திருச்சிக்கு வசதியான நேரத்தில் பயணிக்க முடியும்.
எக்ஸ்பிரஸ் ரயிலாக மாற்றப்பட்ட பிறகு இந்த ரயிலில் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில், இதனை வேளாங்கண்ணி வரை நீட்டிப்பதன் மூலம் ரயில்வேக்குக் கூடுதல் வருவாய் கிடைக்கும் என கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத் தலைவர் எஸ்.ஆர். ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விஜய் முதலமைச்சராகத் தாமதமானதால் தீக்குளித்த விபரீதம் : தவெக நிர்வாகி உயிரிழப்பு!
செவ்வாய் 12, மே 2026 11:50:19 AM (IST)

கழிவு நீக்கம் செய்யப்பட்ட ஈப்பு வாகனம் பொது ஏலம்!
செவ்வாய் 12, மே 2026 10:53:43 AM (IST)

குமரி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: நலத்திட்ட உதவிகள் கோரி 166 மனுக்கள்!
திங்கள் 11, மே 2026 5:50:53 PM (IST)

நாகர்கோவில் மாநகராட்சி மேயராக மேரி பிரின்சி லதா பொறுப்பேற்பு: பணிகளைத் தொடங்கினார்!
திங்கள் 11, மே 2026 12:56:39 PM (IST)

பிளஸ் 2 தேர்வில் சாதனை: மாணவிக்கு ஸ்கூட்டர் பரிசளித்த பி.டி. செல்வகுமார்!
திங்கள் 11, மே 2026 12:44:50 PM (IST)

கேரளாவுக்குக் கனிம வளங்கள் கடத்தல் முற்றிலும் நிறுத்தம்: குமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் அறிவிப்பு!
சனி 9, மே 2026 4:08:42 PM (IST)


