» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
திருமணம் செய்வதாகக் கூறி ரூ.50 லட்சம் மோசடி: இளம்பெண் கைது!
புதன் 24, ஜூன் 2026 10:44:57 AM (IST)
கேரளாவில் சமூக வலைத்தளங்கள் மூலம் அறிமுகமாகும் வாலிபர்களைத் திருமணம் செய்வதாகக் கூறி, ரூ. 50 லட்சம் வரை பண மோசடியில் ஈடுபட்ட இளம்பெண்ணைப் பெரும்பாவூர் போலீசார் கைது செய்துள்ளனர்!
கேரளம் மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா அருகே உள்ள எடத்தலா பகுதியைச் சேர்ந்தவர் ஷம்லா (29). இவருக்குப் பெரும்பாவூர் அருகே உள்ள மஞ்சப்பட்டி பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் சமூக வலைத்தளம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.தொடர்ந்து இருவரும் செல்போனில் பேசி வந்த நிலையில், அந்த வாலிபரைத் திருமணம் செய்து கொள்வதாகவும், தனது வர்த்தகத்தில் பங்குதாரராகச் சேர்ப்பதாகவும் ஷம்லா ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பி அந்த வாலிபர், கடந்த 3.9.2024 முதல் 20.11.2024 வரை பல்வேறு தவணைகளாக மொத்தம் ரூ. 50 லட்சத்தை வங்கி கணக்கு மற்றும் ஜிபே மூலம் ஷம்லாவிடம் செலுத்தியுள்ளார்.
பணத்தைப் பெற்றுக் கொண்ட ஷம்லா, வாலிபரைத் திருமணம் செய்யாமலும், வர்த்தகத்தில் சேர்க்காமலும் ஏமாற்றியுள்ளார். வாலிபர் தனது பணத்தைத் திரும்பக் கேட்டபோது தராமல் காலம் கடத்தியுள்ளார். இதனால் ஏமாற்றமடைந்த வாலிபர் பெரும்பாவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அனில்குமார் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி, ஷம்லாவைக் கைது செய்தனர்.
பல இடங்களில் மோசடி:
போலீசாரின் விசாரணையில், ஷம்லா இதே பாணியில் மலப்புரம், வயநாடு, கோதமங்கலம், ஆலுவா உள்ளிட்ட பல இடங்களில் பல்வேறு வாலிபர்களிடம் நைசாகப் பேசி பல லட்சம் ரூபாய் மோசடி செய்தது அம்பலமாகியுள்ளது. குறிப்பாகக் கோதமங்கலத்தைச் சேர்ந்த ஒருவரிடம் ரூ. 20 லட்சமும், ஆலுவாவைச் சேர்ந்த ஒருவரிடம் ரூ. 11 லட்சமும் ஏமாற்றி, அந்த பணத்தில் அவர் ஆடம்பரமாக வாழ்ந்து வந்தது தெரியவந்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசுப் பள்ளியில் மாணவிகள் மது அருந்திய அதிர்ச்சி சம்பவம்: தலைமையாசிரியர் இடமாற்றம்!
சனி 15, ஆகஸ்ட் 2026 10:46:01 AM (IST)

ஆளூர் - சுசீந்திரம் இடையே புதிய ரயில் பாதை அமைக்க பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:49:07 PM (IST)

மண்டைக்காடு பகுதியில் நீர்நிலைகளை ஆட்சியர் ஆய்வு : கோவில் குளத்தினை தூர்வார உத்தரவு!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:07:44 PM (IST)

புதுக்கடை அருகே வீடு புகுந்து 10 பவுன் நகை திருடிய முன்னாள் ராணுவ வீரர் கைது!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 12:28:29 PM (IST)

பைக்கில் பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்? வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 11:52:22 AM (IST)

நாகர்கோவிலில் ரயில்வே ஊழியர் வீட்டில் திருடிய ஆந்திர வாலிபர் கைது!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 11:30:35 AM (IST)



இவாJun 29, 2026 - 12:23:32 PM | Posted IP 172.7*****