» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தியாகம், மனிதநேயத்தை நினைவூட்டும் மொஹரம் : இஸ்லாமிய மக்களுக்கு விஜய் வசந்த் எம்பி வாழ்த்து

வியாழன் 25, ஜூன் 2026 3:49:43 PM (IST)

இஸ்லாமியப் புத்தாண்டின் தொடக்கமாகவும், தியாகம் மற்றும் மனிதநேயத்தின் உயர்ந்த கருத்துகளை நினைவூட்டுவதாகவும் விளங்கும் மொஹரம் திருநாளை முன்னிட்டு இஸ்லாமியச் சகோதரர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

மொஹரம் திருநாளை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "இஸ்லாமியப் புத்தாண்டின் தொடக்கமாக விளங்கும் இந்த மொஹரம் திருநாள் தியாகம், உண்மை, நீதி மற்றும் மனிதநேயத்தின் உயர்ந்த கருத்துகளை மனிதகுலத்திற்கு நினைவூட்டுவதாக அமைந்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த நன்னாள் தியாக உணர்வையும், அநீதிக்கு எதிராகத் துணிச்சலுடன் எழுந்து நிற்கும் மனப்பக்குவத்தையும் மனிதகுலத்திற்கு என்றும் வழிகாட்டும் ஒளியாகத் திகழ்கிறது என்று தெரிவித்துள்ளார். 

மொஹரம் பண்டிகை நமக்கு ஒற்றுமை, சகோதரத்துவம், பரஸ்பர மரியாதை மற்றும் சமூக நல்லிணக்கத்தின் அவசியத்தை உணர்த்துவதாகக் கூறிய அவர், இந்த புனித நாளில் அமைதி, அன்பு மற்றும் வளம் அனைவரின் இல்லங்களிலும் நிலவட்டும் என்றும், நல்லிணக்கமும் மனிதநேயமும் நிறைந்த சமுதாயம் உருவாக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் தனது வாழ்த்துச் செய்தியில் கேட்டுக்கொண்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory