» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது ரயில் மோதி வாலிபர் உயிரிழப்பு!

புதன் 8, ஏப்ரல் 2026 8:12:50 AM (IST)

கோவில்பட்டி அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற வாலிபர் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ரயில் நிலையம் அருகே உள்ள வேலாயுதபுரம் பகுதியில் தண்டவாளத்தில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாகத் தூத்துக்குடி ரயில்வே போலீசாருக்குத் திங்கட்கிழமை இரவு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உடலைக் கைப்பற்றிக் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர் கோவில்பட்டி வேலாயுதபுரம் சாத்தூர் பிரதான சாலையைச் சேர்ந்த ராஜாமணி என்பவரின் மகன் அருண் (32) என்பது தெரியவந்தது. அருண் சென்னை நங்கநல்லூரில் உள்ள ஒரு சிப்ஸ் கடையில் மாஸ்டராகப் பணியாற்றி வந்தார். சமீபத்தில் தனது தாயைப் பார்ப்பதற்காகச் சென்னையிலிருந்து ஊருக்கு வந்திருந்தார். 

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த ரயிலில் அடிபட்டு அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இது குறித்துத் தூத்துக்குடி ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். தாயைக் காண வந்த இடத்தில் இளைஞர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து

BabuApr 8, 2026 - 11:19:21 AM | Posted IP 172.7*****

veetu vasal la irukura gate la mutti parunga da apo theriyum train na yenna athu idicha yenna agum nu

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory