» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பைக் விபத்தில் வாலிபர் பலி: வெளிநாட்டில் இருந்து சகோதரர் திருமணத்திற்கு வந்தபோது சோகம்!
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 11:23:50 AM (IST)
தக்கலை அருகே சகோதரர் திருமணத்திற்காக வெளிநாட்டில் இருந்து வந்த வாலிபர் மோட்டார் சைக்கிள் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
குமரி மாவட்டம், தக்கலை அருகே உள்ள அரண்மனை சாலை, இலங் கத்துவிளையை சேர்ந்தவர் கண்ணன். இவருக்கு சிபு (31), சீனு (30) என இரண்டு மகன்கள் இருந்தனர். இருவரும் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தனர். இந்தநிலையில் மூத்த மகன் சிபுவுக்கு கடந்த மாதம் திருமணம் நடந்தது. இதையொட்டி - சகோதர்கள் இருவரும் வெளிநாட்டில் இருந்து விடுமுறை - யில் சொந்த ஊருக்கு வந்தனர்
இந்தநிலையில் நேற்று முன் தினம் சீனு தனது நண்பரை பார்பதற்காக குமாரபுரத்திற்கு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். கிறிஸ்தவ ஆலயத்தின் அருகில் சென்ற போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி கீழே விழுந்தது. இதில் சீனு தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் கொற்றிகோடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப் பற்றி பிரேத பரிசோதனைக் காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாகபோலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
வெளிநாட்டில் இருந்து சகோதரர் திருமணத்திற்காக சொந்த ஊருக்கு வந்த வாலிபர் மோட்டார் சைக்கிள் விபத்தில் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள் ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை வாகன சோதனை தீவிரம் : ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
திங்கள் 20, ஏப்ரல் 2026 5:35:13 PM (IST)

தமிழர்களை நேருக்கு நேர் நின்று சரணடைய வைக்க முடியாது: பாஜக - அதிமுக மீது ராகுல் கடும் தாக்கு!
திங்கள் 20, ஏப்ரல் 2026 12:50:35 PM (IST)

குமரி மாவட்டத்தில் சுமார் 11.92 இலட்சம் பேருக்கு வாக்காளர் தகவல் சீட்டு வழங்கல் : ஆட்சியர் தகவல்
வெள்ளி 17, ஏப்ரல் 2026 11:34:10 AM (IST)

நாகர்கோவில் குடிநீர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி: பாஜக வேட்பாளர் எம்.ஆர். காந்தி வாக்குறுதி!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 10:56:27 AM (IST)

திமுக அரசின் ஊழல் ஆட்சியைத் தமிழக மக்கள் விரும்பவில்லை - பிரதமர் மோடி
வியாழன் 16, ஏப்ரல் 2026 12:32:11 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் 8437 பேர் தபால் வாக்குகள் பதிவு - ஆட்சியர் தகவல்
வியாழன் 16, ஏப்ரல் 2026 12:31:37 PM (IST)

