» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடியில் ரூ. 40 லட்சம் மதிப்பிலான பீடி இலைகள் பறிமுதல்: கடத்தல் கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு!
வெள்ளி 6, மார்ச் 2026 8:11:25 AM (IST)

தூத்துக்குடியில் இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ. 40 லட்சம் மதிப்பிலான பீடி இலைகளை க்யூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி தெர்மல் நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கடலோரப் பகுதி வழியாக இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்பட உள்ளதாக க்யூ பிரிவு ஆய்வாளர் விஜய அனிதாவுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் அடிப்படையில், உதவி ஆய்வாளர் ராமசந்திரன், சிறப்பு உதவி ஆய்வாளர் ராமர் மற்றும் காவலர்கள் இருதயராஜகுமார், இசக்கிமுத்து, பழனி, பாலமுருகன், பேச்சிராஜா ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
இன்று (06.03.2026) அதிகாலை சுமார் 03.00 மணியளவில், தெர்மல் நகர் கடற்கரைக்குச் செல்லும் வழியில், காவல் நிலையத்திலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த லோடு வேன் ஒன்றை போலீசார் சோதனையிட்டனர். அப்போது, போலீசாரைக் கண்டதும் வாகனத்தில் இருந்த நபர்கள் தப்பியோடிவிட்டனர்.
அந்த வாகனத்தைச் சோதனையிட்டதில், தலா 30 கிலோ எடை கொண்ட 44 மூட்டைகளில் பீடி இலைகள் இருப்பது கண்டறியப்பட்டது. இலங்கைக்குப் படகு மூலம் கடத்துவதற்காக வாகனத்தில் கொண்டு வரப்பட்ட இந்த பீடி இலைகளின் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் 40 இலட்சம் ரூபாய் எனத் தெரியவந்துள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனம் ஆகியவற்றை உரிய விசாரணைக்குப் பின் சுங்கத்துறையினரிடம் ஒப்படைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தப்பியோடிய கடத்தல் கும்பலை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரயில் இன்ஜினை சிறைபிடித்து இளைஞர் காங்கிரசார் போராட்டம்: இரணியலில் பரபரப்பு!
வெள்ளி 6, மார்ச் 2026 4:49:05 PM (IST)

குமரி பயணிகளின் மிகுந்த வரவேற்பை பெற்று அதிக வருவாய் பெறும் அந்தியோதயா ரயில்
வெள்ளி 6, மார்ச் 2026 12:27:09 PM (IST)

நாகர்கோவிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு அந்தியோதயா ரயில் கட்டண விபரம்
வெள்ளி 6, மார்ச் 2026 10:14:29 AM (IST)

கபாடபுரமும், தென்மதுரையும் இங்கே! குமரிக்கண்டம் எங்கே? பெ.இராஜேஷ் செல்வரதி நூல் வெளியீட்டு விழா
வெள்ளி 6, மார்ச் 2026 8:01:34 AM (IST)

இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: இளைஞர் உயிரிழப்பு; இருவர் படுகாயம்!
வியாழன் 5, மார்ச் 2026 4:30:14 PM (IST)

அடகுக் கடை நடத்தி 300 பவுன் நகை மோசடி: வாலிபர் கைது, பெற்றோர் தலைமறைவு!
வியாழன் 5, மார்ச் 2026 8:32:45 AM (IST)


அதுMar 6, 2026 - 08:14:03 AM | Posted IP 172.7*****