» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
ரயில் இன்ஜினை சிறைபிடித்து இளைஞர் காங்கிரசார் போராட்டம்: இரணியலில் பரபரப்பு!
வெள்ளி 6, மார்ச் 2026 4:49:05 PM (IST)

இரணியல் ரயில் நிலையத்தில் ஆய்வு செய்ய வந்த உயர் அதிகாரியின் ரயில் இன்ஜினை, இளைஞர் காங்கிரஸார் மற்றும் பொதுமக்கள் சிறைபிடித்துப் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் ரயில் நிலையத்தில் 5-வது நடைமேடை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டுப் பணிகளை வலியுறுத்தி, ரயில்வே அதிகாரியிடம் கோரிக்கை மனு அளிக்க இளைஞர் காங்கிரஸ் திட்டமிட்டிருந்தது. இதற்காக, நேற்று சிறப்புச் சோதனை ரயில் இன்ஜின் மூலம் ஆய்வு செய்ய வந்த உயர் அதிகாரியைச் சந்திக்க நிர்வாகிகள் சென்றனர்.
ஆனால், அந்த அதிகாரி மனுவைப் பெற்றுக்கொள்ள மறுத்ததோடு, நிர்வாகிகளைச் சந்திக்காமல் அலைக்கழித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கட்சியினரும் பொதுமக்களும், அதிகாரி வந்த அந்தச் சோதனை ரயில் இன்ஜினை முற்றுகையிட்டு தண்டவாளத்தில் அமர்ந்து சிறைபிடித்தனர்.
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் பியூட்லின் ஜீவா தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்திற்கு, குருந்தன்கோடு வட்டாரத் தலைவர் ஸ்ரீவேணு முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட பொதுச்செயலாளர் மதியழகன், திங்கள்நகர் பேரூராட்சி தலைவர் சுமன், ரீத்தாபுரம் துணைத் தலைவர் விஜூமோன், கவுன்சிலர் ஜேக்கப், தக்கலை வட்டாரத் தலைவர் திஜீ, வின்சென்ட் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, வேறு வழியின்றி இறங்கி வந்த ரயில்வே அதிகாரி, நிர்வாகிகளை நேரில் அழைத்துச் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் கோரிக்கை மனுவைப் பெற்றுக்கொண்ட அவர், கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதிகாரியின் உறுதிமொழியைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. அதன் பின்னரே சிறைபிடிக்கப்பட்ட ரயில் இன்ஜின் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை வாகன சோதனை தீவிரம் : ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
திங்கள் 20, ஏப்ரல் 2026 5:35:13 PM (IST)

தமிழர்களை நேருக்கு நேர் நின்று சரணடைய வைக்க முடியாது: பாஜக - அதிமுக மீது ராகுல் கடும் தாக்கு!
திங்கள் 20, ஏப்ரல் 2026 12:50:35 PM (IST)

குமரி மாவட்டத்தில் சுமார் 11.92 இலட்சம் பேருக்கு வாக்காளர் தகவல் சீட்டு வழங்கல் : ஆட்சியர் தகவல்
வெள்ளி 17, ஏப்ரல் 2026 11:34:10 AM (IST)

நாகர்கோவில் குடிநீர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி: பாஜக வேட்பாளர் எம்.ஆர். காந்தி வாக்குறுதி!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 10:56:27 AM (IST)

திமுக அரசின் ஊழல் ஆட்சியைத் தமிழக மக்கள் விரும்பவில்லை - பிரதமர் மோடி
வியாழன் 16, ஏப்ரல் 2026 12:32:11 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் 8437 பேர் தபால் வாக்குகள் பதிவு - ஆட்சியர் தகவல்
வியாழன் 16, ஏப்ரல் 2026 12:31:37 PM (IST)

