» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை - நாகர்கோவில் நீதிமன்றம் தீர்ப்பு

வியாழன் 5, மார்ச் 2026 8:27:59 AM (IST)

சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாகர்கோவில் போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூர், புதுவீட்டுவிளை பகுதியைச் சேர்ந்தவர் ரதீசன் என்ற ஸ்டாலின் (36). ஆய்வகத் தொழில்நுட்பவியலாளராக (Lab Technician) பணியாற்றி வந்த இவர், கடந்த 2018-ஆம் ஆண்டு 17 வயது சிறுமி ஒருவரை ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்துச் சிறுமியின் உறவினர்கள் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் ரதீசன் மீது வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். பின்னர் அவர் நாகர்கோவிலில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு நீதிபதி சுந்தரய்யா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் முத்துக்குமாரி ஆஜராகி வாதிட்டார்.

வழக்கின் அனைத்துத் தரப்பு விசாரணைகளும் முடிவடைந்த நிலையில், நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார். அதில்: குற்றம் சாட்டப்பட்ட ரதீசனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சிறை தண்டனையுடன் ரூ. 5,000 அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory