» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
அடகுக் கடை நடத்தி 300 பவுன் நகை மோசடி: வாலிபர் கைது, பெற்றோர் தலைமறைவு!
வியாழன் 5, மார்ச் 2026 8:32:45 AM (IST)
குமரி மாவட்டத்தில் அடகுக் கடை நடத்தி 75 பேரிடம் சுமார் 300 பவுன் நகைகளை மோசடி செய்த வழக்கில் ஒரு வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
குமரி மாவட்டம் முள்ளங்கினாவிளை பகுதியில் நகை அடகுக் கடை நடத்தி வந்த சைலஸ் (52), அவரது மனைவி நிர்மலா (45) மற்றும் மகன் அகில் எஸ். விகானோ (27) ஆகியோர் மீது பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.அடகு வைத்த நகைகளைத் திருப்பச் சென்றபோது கடை பூட்டப்பட்டிருந்ததாகவும், கடை நடத்தியவர்கள் தலைமறைவானதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டது. காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டுத் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
கோவையில் உள்ள நண்பர் வீட்டில் பதுங்கியிருந்த அகில் எஸ். விகானோவை தனிப்படை போலீஸார் கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில் 75 பேரிடம் 300 பவுன் நகைகள் மோசடி செய்யப்பட்டது உறுதியானது. கைது செய்யப்பட்ட அகில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். தலைமறைவாக உள்ள அவரது பெற்றோரைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை - நாகர்கோவில் நீதிமன்றம் தீர்ப்பு
வியாழன் 5, மார்ச் 2026 8:27:59 AM (IST)

கன்னியாகுமரி மாவட்ட வங்கி ஒருங்கிணைப்பாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
செவ்வாய் 3, மார்ச் 2026 3:09:41 PM (IST)

தாட்கோ மூலம் இளைஞர்களுக்கு ஒப்பனை, அழகுக்கலை பயிற்சி: விண்ணப்பங்கள் வரவேற்பு
செவ்வாய் 3, மார்ச் 2026 12:26:10 PM (IST)

குமரி கோமேதகம் ஆர். பொன்னப்ப நாடார் பிறந்தநாள்: தமிழக அரசு சார்பில் மரியாதை
செவ்வாய் 3, மார்ச் 2026 12:18:52 PM (IST)

குலசேகரம் அருகே தொட்டிப்பாலம் உடைப்பு ஏற்படும் அபாயம்: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை!
திங்கள் 2, மார்ச் 2026 8:30:58 PM (IST)

பேச்சிப்பாறை அருகே மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சியவர் கைது: 10 லிட்டர் ஊறல் பறிமுதல்
வெள்ளி 27, பிப்ரவரி 2026 12:44:43 PM (IST)

