» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பெருமணல் மீனவ கிராமத்தில் ரூ.19.33 கோடியில் தூண்டில் வளைவு நீட்டிப்புப் பணி அடிக்கல் நாட்டு விழா!

புதன் 4, மார்ச் 2026 5:19:09 PM (IST)



பெருமணல் மீனவ கிராமத்தில் ரூ.19.33 கோடி மதிப்பீட்டில் தூண்டில் வளைவு நீட்டிப்புப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.

திருநெல்வேலி மாவட்டம், பெருமணல் மீனவ கிராமத்தில் ரூ.19.33 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள தூண்டில் வளைவு நீட்டிப்புப் பணிகளுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (04.03.2026) தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.

இதனைத் தொடர்ந்து, பெருமணல் மீனவ கிராமத்தில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் மாண்புமிகு மு. அப்பாவு அவர்கள் பணிகளைத் தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கிச் சிறப்பித்தார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவு அவர்கள் தெரிவித்ததாவது: "மாண்புமிகு முதலமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசு, மீனவர்களின் நலனைக் காக்கப் பல்வேறு முன்னோடித் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. பெருமணல் மீனவ மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, இப்பணிக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

இந்தத் தூண்டில் வளைவு நீட்டிப்பு மூலம் கடல் அரிப்பு முற்றிலுமாகத் தடுக்கப்படும். மீன்பிடிப் படகுகளை இயக்குவது எளிதாகும் மற்றும் விபத்துகள் தவிர்க்கப்படும். மீனவர்களின் சமூக-பொருளாதார நிலை உயரும். மீனவர்களின் நலன் கருதி இத்திட்டத்தைத் தந்துள்ள முதலமைச்சர் அவர்களுக்கு மீனவ மக்கள் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சா. ஞானதிரவியம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் திரு. ராஜத்துரை, அருட்தந்தை பிரபு, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் திரு. பாஸ்கர், முக்கியப் பிரமுகர்கள் திரு. ஜோசப் பெல்சி, திரு. அலெக்ஸ் அப்பாவு மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory