» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பேச்சிப்பாறை அருகே மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சியவர் கைது: 10 லிட்டர் ஊறல் பறிமுதல்
வெள்ளி 27, பிப்ரவரி 2026 12:44:43 PM (IST)

பேச்சிப்பாறை அருகே மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சியவரை மதுவிலக்கு பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 10 லிட்டர் சாராய ஊறல் மற்றும் உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
குமரி மாவட்டம் இரணியலைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் தக்கலை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாருக்கு, பேச்சிப்பாறை அடுத்த மணலோடை - கிள்ளிக்கோணம் பகுதியில் சாராயம் காய்ச்சப்படுவதாக ரகசியத் தகவல் கிடைத்தது.
இந்தத் தகவலின் அடிப்படையில், மதுவிலக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கமலி, சப்-இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் நேற்று அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, மணலோடை பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்றிருந்த ஒருவரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்குப்பின் முரணாகப் பதிலளித்ததால், போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர் கிள்ளிக்கோணம் பகுதியைச் சேர்ந்த தங்கப்பன் மகன் சதீஷ் (43) என்பது தெரியவந்தது. மேலும், அவர் அப்பகுதியில் உள்ள மலை மறைவிடத்தில் சட்டவிரோதமாகச் சாராயம் காய்ச்சி வந்ததையும் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து, அவர் சாராயம் காய்ச்சப் பயன்படுத்திய 10 லிட்டர் சாராய ஊறல், பானை, ரப்பர் டியூப்புகள், குடம், கப் மற்றும் மரப்பலகைகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட சதீஷ், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரயில் இன்ஜினை சிறைபிடித்து இளைஞர் காங்கிரசார் போராட்டம்: இரணியலில் பரபரப்பு!
வெள்ளி 6, மார்ச் 2026 4:49:05 PM (IST)

குமரி பயணிகளின் மிகுந்த வரவேற்பை பெற்று அதிக வருவாய் பெறும் அந்தியோதயா ரயில்
வெள்ளி 6, மார்ச் 2026 12:27:09 PM (IST)

நாகர்கோவிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு அந்தியோதயா ரயில் கட்டண விபரம்
வெள்ளி 6, மார்ச் 2026 10:14:29 AM (IST)

கபாடபுரமும், தென்மதுரையும் இங்கே! குமரிக்கண்டம் எங்கே? பெ.இராஜேஷ் செல்வரதி நூல் வெளியீட்டு விழா
வெள்ளி 6, மார்ச் 2026 8:01:34 AM (IST)

இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: இளைஞர் உயிரிழப்பு; இருவர் படுகாயம்!
வியாழன் 5, மார்ச் 2026 4:30:14 PM (IST)

அடகுக் கடை நடத்தி 300 பவுன் நகை மோசடி: வாலிபர் கைது, பெற்றோர் தலைமறைவு!
வியாழன் 5, மார்ச் 2026 8:32:45 AM (IST)

