» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பேச்சிப்பாறை அருகே மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சியவர் கைது: 10 லிட்டர் ஊறல் பறிமுதல்

வெள்ளி 27, பிப்ரவரி 2026 12:44:43 PM (IST)



பேச்சிப்பாறை அருகே மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சியவரை மதுவிலக்கு பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 10 லிட்டர் சாராய ஊறல் மற்றும் உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

குமரி மாவட்டம் இரணியலைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் தக்கலை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாருக்கு, பேச்சிப்பாறை அடுத்த மணலோடை - கிள்ளிக்கோணம் பகுதியில் சாராயம் காய்ச்சப்படுவதாக ரகசியத் தகவல் கிடைத்தது.

இந்தத் தகவலின் அடிப்படையில், மதுவிலக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கமலி, சப்-இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் நேற்று அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, மணலோடை பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்றிருந்த ஒருவரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்குப்பின் முரணாகப் பதிலளித்ததால், போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர் கிள்ளிக்கோணம் பகுதியைச் சேர்ந்த தங்கப்பன் மகன் சதீஷ் (43) என்பது தெரியவந்தது. மேலும், அவர் அப்பகுதியில் உள்ள மலை மறைவிடத்தில் சட்டவிரோதமாகச் சாராயம் காய்ச்சி வந்ததையும் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து, அவர் சாராயம் காய்ச்சப் பயன்படுத்திய 10 லிட்டர் சாராய ஊறல், பானை, ரப்பர் டியூப்புகள், குடம், கப் மற்றும் மரப்பலகைகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட சதீஷ், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory