» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் மார்ச் 23-ல் தீர்ப்பு: மதுரை நீதிமன்றம் அறிவிப்பு
செவ்வாய் 3, மார்ச் 2026 8:07:02 AM (IST)
நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில், ஒன்பது போலீசாருக்கு எதிரான தீர்ப்பு வரும் மார்ச் 23-ஆம் தேதி வழங்கப்படும் என மதுரை மாவட்ட நீதிமன்றம் அறிவித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரி ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை கடந்த 2020-ஆம் ஆண்டு விசாரணைக்காக அழைத்துச் சென்ற போலீசார், கொடூரமாகத் தாக்கியதில் அவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.
இதில் அப்போதைய காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உட்பட 9 போலீசார் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சுமார் 6 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணையை மதுரை உயர்நீதிமன்றம் நேரடியாகக் கண்காணித்து வந்தது. வழக்கில் மொத்தம் 100-க்கும் மேற்பட்ட சாட்சிகள் சேர்க்கப்பட்டிருந்தனர். சிறையில் இருந்தபோது பால்துரை என்ற சார்பு ஆய்வாளர் கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.
கைது செய்யப்பட்டுள்ள 9 போலீசாரின் ஜாமீன் மனுக்கள் மாவட்ட நீதிமன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரை தள்ளுபடி செய்யப்பட்டன. நேற்று மாலை இந்த வழக்கின் இறுதி விசாரணை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, நீதிபதி முத்துகுமரன் தீர்ப்புக்கான தேதியை அறிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரி ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை கடந்த 2020-ஆம் ஆண்டு விசாரணைக்காக அழைத்துச் சென்ற போலீசார், கொடூரமாகத் தாக்கியதில் அவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.
இதில் அப்போதைய காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உட்பட 9 போலீசார் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சுமார் 6 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணையை மதுரை உயர்நீதிமன்றம் நேரடியாகக் கண்காணித்து வந்தது. வழக்கில் மொத்தம் 100-க்கும் மேற்பட்ட சாட்சிகள் சேர்க்கப்பட்டிருந்தனர். சிறையில் இருந்தபோது பால்துரை என்ற சார்பு ஆய்வாளர் கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.
கைது செய்யப்பட்டுள்ள 9 போலீசாரின் ஜாமீன் மனுக்கள் மாவட்ட நீதிமன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரை தள்ளுபடி செய்யப்பட்டன. நேற்று மாலை இந்த வழக்கின் இறுதி விசாரணை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, நீதிபதி முத்துகுமரன் தீர்ப்புக்கான தேதியை அறிவித்தார்.
மக்கள் கருத்து
BabuMar 3, 2026 - 09:01:45 AM | Posted IP 172.7*****
intha sambavathuku apuram thana nikitha nu oruthi poi case kuduthu oruthara adichu konnanuga ipo avalayum kanom adika sonavan yevanum therila kadasila adichavan kum ithe nilamai than
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரி மாவட்ட வங்கி ஒருங்கிணைப்பாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
செவ்வாய் 3, மார்ச் 2026 3:09:41 PM (IST)

தாட்கோ மூலம் இளைஞர்களுக்கு ஒப்பனை, அழகுக்கலை பயிற்சி: விண்ணப்பங்கள் வரவேற்பு
செவ்வாய் 3, மார்ச் 2026 12:26:10 PM (IST)

குமரி கோமேதகம் ஆர். பொன்னப்ப நாடார் பிறந்தநாள்: தமிழக அரசு சார்பில் மரியாதை
செவ்வாய் 3, மார்ச் 2026 12:18:52 PM (IST)

குலசேகரம் அருகே தொட்டிப்பாலம் உடைப்பு ஏற்படும் அபாயம்: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை!
திங்கள் 2, மார்ச் 2026 8:30:58 PM (IST)

பேச்சிப்பாறை அருகே மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சியவர் கைது: 10 லிட்டர் ஊறல் பறிமுதல்
வெள்ளி 27, பிப்ரவரி 2026 12:44:43 PM (IST)

பெண் குழந்தைகளின் பாலின விகிதத்தை உயர்த்துவதில் கன்னியாகுமரி சாதனை: முதல்வர் பாராட்டு!
வெள்ளி 27, பிப்ரவரி 2026 11:00:33 AM (IST)


முட்டாள் வக்கீல்Mar 3, 2026 - 02:16:26 PM | Posted IP 172.7*****