» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கடற்கரையில் மீன்கள் செத்து ஒதுங்கியதால் பரபரப்பு
திங்கள் 2, மார்ச் 2026 8:39:14 AM (IST)
தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் கடற்கரையில் அதிக அளவில் மீன்கள் செத்து ஒதுங்கியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடிக்கு அருகிலுள்ள ஒரு மீனவ கிராமம் தருவைகுளம் ஆகும். இப்பகுதிக்கும் வெள்ளப்பட்டிக்கும் இடையே உப்பாற்று ஓடை அமைந்துள்ளது. மழைக்காலங்களில் காட்டாற்று வெள்ளம் இந்த ஓடை வழியாக வந்து தருவைகுளம் அருகே கடலில் கலப்பது வழக்கம். இந்த ஓடையின் குறுக்கே தற்போது புதிய மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டுள்ளது.
நேற்று, இந்த உப்பாற்று ஓடை கடலில் கலக்கும் பகுதியில் திடீரென மீன்கள் செத்து கரை ஒதுங்கிக் கிடந்தன. இதில் சுமார் அரை கிலோ எடையுள்ள மீன்கள் அதிக அளவில் இறந்த நிலையில் காணப்பட்டன. தகவல் அறிந்த அப்பகுதி மீனவர்களும் பொதுமக்களும் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டனர்.
உப்பாற்று ஓடை நீர் கடலில் கலக்கும் இடத்தில் மீன்கள் செத்து ஒதுங்கியுள்ளதால், அந்தத் தண்ணீரில் ஏதேனும் நச்சுக் கழிவுகள் கலந்திருக்க வாய்ப்பிருக்கலாம் என மீனவர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தருவைகுளம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குலசேகரம் அருகே தொட்டிப்பாலம் உடைப்பு ஏற்படும் அபாயம்: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை!
திங்கள் 2, மார்ச் 2026 8:30:58 PM (IST)

பேச்சிப்பாறை அருகே மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சியவர் கைது: 10 லிட்டர் ஊறல் பறிமுதல்
வெள்ளி 27, பிப்ரவரி 2026 12:44:43 PM (IST)

பெண் குழந்தைகளின் பாலின விகிதத்தை உயர்த்துவதில் கன்னியாகுமரி சாதனை: முதல்வர் பாராட்டு!
வெள்ளி 27, பிப்ரவரி 2026 11:00:33 AM (IST)

நாகர்கோவிலில் சுதந்திரப் போராட்ட வீரர் பொன்னப்ப நாடார் திருவுருவச் சிலை: முதல்வர் திறந்து வைத்தார்!
புதன் 25, பிப்ரவரி 2026 4:00:18 PM (IST)

வைகுண்டசாமி பிறந்த நாள்: மார்ச் 4-ம் தேதி குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
புதன் 25, பிப்ரவரி 2026 3:24:30 PM (IST)

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் 90 வீடுகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!
செவ்வாய் 24, பிப்ரவரி 2026 4:43:37 PM (IST)


ஓட்டு போட்ட முட்டாள்Mar 2, 2026 - 09:09:27 AM | Posted IP 162.1*****