» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கடற்கரையில் மீன்கள் செத்து ஒதுங்கியதால் பரபரப்பு

திங்கள் 2, மார்ச் 2026 8:39:14 AM (IST)

தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் கடற்கரையில் அதிக அளவில் மீன்கள் செத்து ஒதுங்கியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடிக்கு அருகிலுள்ள ஒரு மீனவ கிராமம் தருவைகுளம் ஆகும். இப்பகுதிக்கும் வெள்ளப்பட்டிக்கும் இடையே உப்பாற்று ஓடை அமைந்துள்ளது. மழைக்காலங்களில் காட்டாற்று வெள்ளம் இந்த ஓடை வழியாக வந்து தருவைகுளம் அருகே கடலில் கலப்பது வழக்கம். இந்த ஓடையின் குறுக்கே தற்போது புதிய மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டுள்ளது.

நேற்று, இந்த உப்பாற்று ஓடை கடலில் கலக்கும் பகுதியில் திடீரென மீன்கள் செத்து கரை ஒதுங்கிக் கிடந்தன. இதில் சுமார் அரை கிலோ எடையுள்ள மீன்கள் அதிக அளவில் இறந்த நிலையில் காணப்பட்டன. தகவல் அறிந்த அப்பகுதி மீனவர்களும் பொதுமக்களும் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டனர். 

உப்பாற்று ஓடை நீர் கடலில் கலக்கும் இடத்தில் மீன்கள் செத்து ஒதுங்கியுள்ளதால், அந்தத் தண்ணீரில் ஏதேனும் நச்சுக் கழிவுகள் கலந்திருக்க வாய்ப்பிருக்கலாம் என மீனவர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தருவைகுளம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து

ஓட்டு போட்ட முட்டாள்Mar 2, 2026 - 09:09:27 AM | Posted IP 162.1*****

கழிவுநீரை கடலில் கலக்க ஆலை அமைத்து சுத்தப்படுத்தி வெளியேற்ற வேண்டும் , அந்த ஆலை அமைக்க நம்ம ஊரு சாக்கடை அரசியல்வாதிகளுக்கு மூளை இல்லை.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory