» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
ரயில் முன் பாய்ந்து புதுமாப்பிள்ளை தற்கொலை : திருமணமான ஆறே நாட்களில் சோகம்!
ஞாயிறு 22, பிப்ரவரி 2026 8:26:41 AM (IST)
திருச்செந்தூர் அருகே திருமணமான ஆறே நாட்களில், புதுமாப்பிள்ளை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரி, ராஜமன்னியபுரத்தைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவரின் மகன் இமானுவேல் எடிசன் (26). இவர் நாலுமாவடியில் உள்ள ஒரு தனியார் அச்சகத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கும், கோவில்பட்டியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த பிப்ரவரி 16-ம் தேதி கோவில்பட்டியில் வைத்து திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்து ஒரு வாரமே ஆன நிலையில், நேற்று (சனிக்கிழமை) மாலை திருச்செந்தூரிலிருந்து திருநெல்வேலி நோக்கிச் சென்ற பயணிகள் ரயில், அடைக்கலாபுரம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக இமானுவேல் எடிசன் அந்த ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருச்செந்தூர் டி.எஸ்.பி மகேஷ்குமார் மற்றும் ரயில்வே எஸ்.எஸ்.ஐ சங்கரபாண்டியன் தலைமையிலான போலீசார், உயிரிழந்தவரின் உடலைக் கைப்பற்றினர். உடல் பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
திருமணமான சில நாட்களிலேயே வாலிபர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிரதமர் மோடி வருகை: கன்னியாகுமரிக்கு தினசரி இரயில்கள் கிடைக்குமா? – பயணிகள் எதிர்பார்ப்பு!
வெள்ளி 20, பிப்ரவரி 2026 8:10:46 PM (IST)

அமிர்த் பாரத் கால அட்டவணையை மாற்றக் கோரிக்கை: நள்ளிரவில் சேருவதால் ரயில் பயணிகள் அவதி
வியாழன் 19, பிப்ரவரி 2026 8:02:34 PM (IST)

சீசன் காலத்தில் ஏமாற்றிய கேரை மீன்கள்: சூறைக் காற்றால் பாதியிலேயே கரை திரும்பிய மீனவர்கள்!
வியாழன் 19, பிப்ரவரி 2026 5:10:51 PM (IST)

விபத்தில் மூளைச்சாவு அடைந்த புதுமாப்பிள்ளை: உடல் உறுப்புகள் தானம் மூலம் 6 பேருக்கு மறுவாழ்வு
வியாழன் 19, பிப்ரவரி 2026 8:41:44 AM (IST)

துபாயில் வேலை என ஆசை காட்டி ரூ.1.5 கோடி மோசடி செய்தவர் 24 மணி நேரத்தில் கைது!
புதன் 18, பிப்ரவரி 2026 4:55:56 PM (IST)

மருத்துவ மேல்படிப்புக்கு சீட் வாங்கித் தருவதாக ரூ.18 லட்சம் மோசடி: தம்பதி உட்பட 3 பேர் மீது வழக்கு!
புதன் 18, பிப்ரவரி 2026 8:41:13 AM (IST)

