» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான நவீன பூங்கா அமைய ஆய்வு: கவுன்சிலர் கோரிக்கை ஏற்பு
சனி 21, பிப்ரவரி 2026 3:16:23 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி 34-வது வார்டு தேவகி நகர் சிறுவர் விளையாட்டு பூங்காவினை மாற்றுத்திறனாளிகள் பூங்காவாக மாற்றுவது தொடர்பாக கனிமொழி நேரில் ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 34-வது வார்டு தேவகி நகர் பகுதியில், பூங்கா அமைப்பதற்கான திட்டமானது, 34-வது வார்டு கவுன்சிலர் சந்திரபோஸ் முன்வைத்த கோரிக்கையைத் தொடர்ந்து பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. பொதுமக்களின் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் நலன் கருதி அவர் விடுத்த கோரிக்கையை ஏற்று, இதற்கான இடத்தை கனிமொழி எம்பி, அமைச்சர் கீதாஜீவன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் ப்ரியங்கா, வார்டு கவுன்சிலர் சந்திரபோஸ் ஆகியோர் உடனிருந்தனர். மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக அதிநவீன உபகரணங்கள் மற்றும் நடைபயிற்சி தளங்களுடன் இந்த பூங்கா அமையவுள்ளது. பணிகள் நிறைவடைந்ததும் மக்கள் பயன்பாட்டிற்கு மிக விரைவில் இது கொண்டு வரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிரதமர் மோடி வருகை: கன்னியாகுமரிக்கு தினசரி இரயில்கள் கிடைக்குமா? – பயணிகள் எதிர்பார்ப்பு!
வெள்ளி 20, பிப்ரவரி 2026 8:10:46 PM (IST)

அமிர்த் பாரத் கால அட்டவணையை மாற்றக் கோரிக்கை: நள்ளிரவில் சேருவதால் ரயில் பயணிகள் அவதி
வியாழன் 19, பிப்ரவரி 2026 8:02:34 PM (IST)

சீசன் காலத்தில் ஏமாற்றிய கேரை மீன்கள்: சூறைக் காற்றால் பாதியிலேயே கரை திரும்பிய மீனவர்கள்!
வியாழன் 19, பிப்ரவரி 2026 5:10:51 PM (IST)

விபத்தில் மூளைச்சாவு அடைந்த புதுமாப்பிள்ளை: உடல் உறுப்புகள் தானம் மூலம் 6 பேருக்கு மறுவாழ்வு
வியாழன் 19, பிப்ரவரி 2026 8:41:44 AM (IST)

துபாயில் வேலை என ஆசை காட்டி ரூ.1.5 கோடி மோசடி செய்தவர் 24 மணி நேரத்தில் கைது!
புதன் 18, பிப்ரவரி 2026 4:55:56 PM (IST)

மருத்துவ மேல்படிப்புக்கு சீட் வாங்கித் தருவதாக ரூ.18 லட்சம் மோசடி: தம்பதி உட்பட 3 பேர் மீது வழக்கு!
புதன் 18, பிப்ரவரி 2026 8:41:13 AM (IST)

