» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடியில் பக்கிள் ஓடை விரிவாக்கப் பணிகள் : கனிமொழி எம்பி துவக்கி வைத்தார்!
சனி 21, பிப்ரவரி 2026 12:07:26 PM (IST)

தூத்துக்குடியில் பக்கிள் ஓடை விரிவாக்கப் பணி உட்பட பல்வேறு பணிகளை கனிமொழி எம்பி அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் இன்று நடைபெற்ற விழாவில், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி. கீதா ஜீவன் முன்னிலையில் பல்வேறு திட்டப்பணிகளைத் திறந்து வைத்தார்.
செல்சீனி காலனி மற்றும் திரவியரத்தின நகர் ஆகிய பகுதிகளுக்கான புதிய நியாயவிலைக் கடைகள் மக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைக்கப்பட்டன. என்எல்சி தமிழ்நாடு பவர் லிமிடெட் (NTPL) நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியின் கீழ், ரூபாய் 94.57 இலட்சம் மதிப்பீட்டில் தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் கட்டப்பட்டுள்ள அதிநவீன கழிப்பறை கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.
தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சி, 35வது வார்டு தேவகி நகர் சிறுவர் விளையாட்டு பூங்காவினை மாற்றுத்திறனாளிகள் பூங்காவாக மாற்றுவது தொடர்பாக தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி பார்வையிட்டார். தூத்துக்குடி மாநகராட்சி, வி.வி.டி சாலை - பண்டுகரை சாலை சந்திப்பு (4ஆம் ரயில்வே கேட் ஓடை பாலம் அருகில்) பக்கிள் ஓடை விரிவாக்கப் பணிக்கான அடிக்கல் நாட்டி பணியினை துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்வின் போது மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத், மாநகராட்சி மேயர் பெ. ஜெகன் மற்றும் மாநகராட்சி ஆணையர் சி. ப்ரியங்கா ஆகியோர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிரதமர் மோடி வருகை: கன்னியாகுமரிக்கு தினசரி இரயில்கள் கிடைக்குமா? – பயணிகள் எதிர்பார்ப்பு!
வெள்ளி 20, பிப்ரவரி 2026 8:10:46 PM (IST)

அமிர்த் பாரத் கால அட்டவணையை மாற்றக் கோரிக்கை: நள்ளிரவில் சேருவதால் ரயில் பயணிகள் அவதி
வியாழன் 19, பிப்ரவரி 2026 8:02:34 PM (IST)

சீசன் காலத்தில் ஏமாற்றிய கேரை மீன்கள்: சூறைக் காற்றால் பாதியிலேயே கரை திரும்பிய மீனவர்கள்!
வியாழன் 19, பிப்ரவரி 2026 5:10:51 PM (IST)

விபத்தில் மூளைச்சாவு அடைந்த புதுமாப்பிள்ளை: உடல் உறுப்புகள் தானம் மூலம் 6 பேருக்கு மறுவாழ்வு
வியாழன் 19, பிப்ரவரி 2026 8:41:44 AM (IST)

துபாயில் வேலை என ஆசை காட்டி ரூ.1.5 கோடி மோசடி செய்தவர் 24 மணி நேரத்தில் கைது!
புதன் 18, பிப்ரவரி 2026 4:55:56 PM (IST)

மருத்துவ மேல்படிப்புக்கு சீட் வாங்கித் தருவதாக ரூ.18 லட்சம் மோசடி: தம்பதி உட்பட 3 பேர் மீது வழக்கு!
புதன் 18, பிப்ரவரி 2026 8:41:13 AM (IST)


podhu janamFeb 21, 2026 - 05:52:19 PM | Posted IP 172.7*****