» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தாமிரபரணி ஆற்றில் மூழ்கி அக்காள்-தங்கை பலி: தந்தையின் கண் முன்னே பரிதாபம்!

சனி 21, பிப்ரவரி 2026 8:50:45 AM (IST)

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே தாமிரபரணி ஆற்றில் குளித்தபோது, கேரளாவைச் சேர்ந்த அக்காள் மற்றும் தங்கை ஆகிய இரு சிறுமிகள் நீரில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தேனி மாவட்டம் பங்களாமேட்டைச் சேர்ந்தவர் சந்திரகுமார் (45). இவர் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். தனது குலதெய்வக் கோவில் விழாவிற்காகக் குடும்பத்தினருடன் ஒரு வேனில் தூத்துக்குடி வந்திருந்தார். திருச்செந்தூர் செல்லும் வழியில், ஏரல் சேர்மன் அருணாச்சலசாமி கோவிலுக்கு வந்த அவர்கள், அங்கிருந்த தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர்.

அப்போது சந்திரகுமாரின் மகள்களான அபிநயா (16) மற்றும் மீனாட்சி (12) உட்பட 4 சிறுமிகள் ஆற்றின் ஆழமான பகுதியில் இறங்கியதால் நீரில் மூழ்கித் தத்தளித்தனர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தந்தை சந்திரகுமார் நீரில் குதித்து அவர்களை மீட்க முயன்றார். அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் 2 சிறுமிகளும், சந்திரகுமாரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

நீண்ட தேடுதலுக்குப் பிறகு தீயணைப்புத் துறையினர் அபிநயா மற்றும் மீனாட்சியைப் பிணமாக மீட்டனர். ஏரல் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். தந்தையின் கண் முன்னாலேயே இரண்டு மகள்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து

BabuFeb 21, 2026 - 01:20:02 PM | Posted IP 162.1*****

adikadi ithu matiri news varuthu arivipu yethum ilaya

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory